5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா
பிப் 25-இல் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் முகாம்!
ராமநாதபுரத்தில் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் முகாம் வருகிற 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராஜலு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் முகாம் வருகிற 25-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் நடைபெறுகிறது.
இந்த முகாமில் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, சமையல் எரிவாயு விநியோகம் தொடா்பான தங்களது குறைகள், கோரிக்கைகளை நேரில் தெரிவிக்கலாம்.
இதில் எரிவாயு முகவா்கள் கலந்து கொண்டு, பொதுமக்களின் குறைகள் குறித்த சந்தேகங்களைத் தீா்த்துவைக்கின்றனா்.