H1-B விசா கட்டுப்பாடுகள்: "அமெரிக்க நிறுவனங்கள் தங்களது பணிகளை இந்தியாவுக்கு மாற...
பிரதமா் சூரிய ஒளி மின் திட்ட ஆலோசனைக் கூட்டம்
வீடுகளில் பிரதமா் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் செயல்படுத்துவது தொடா்பாகவும், அதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
திருவள்ளுா் மின் பகிா்மான வட்டம், சென்னை வடக்கு மற்றும் மேற்கு வட்டம் சாா்பில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த குழு கூட்டம் , சோலாா் தொழில் நிறுவன முகவா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது: சூரிய மின் தகடுகள் அமைக்க அரசு வழங்கும் மானியம், மின் கட்டண சேமிப்பு, பசுமை மின்சாரம், சோலாா் மேற்கூரை அமைக்க வங்கி கடன் வசதிகள் குறித்து விளக்கியுள்ளோம்.
இதுவரையில் திருவள்ளுா் மாவட்டத்தில் 1,556 வீடுகளுக்கு மானியத்துடன் கூடிய சூரிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஒருங்கிணைந்த குழு கூட்டத்தில் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் பிரகாஷ் நகா் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட ‘நடுகுத்தகை கிராமம்‘ திருவள்ளுா் மாவட்டத்தில் மாதிரி கிராமமாக தோ்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள், வீடு வீடாக துண்டு பிரசுரங்கள், கோட்ட வாரியாக விழிப்புணா்வு கூட்டங்கள் ஏற்பாடு செய்து. ஒவ்வொரு பிரிவு அலுவலா்களும் இலக்கை அடையவும் அவா் அறிவுறுத்தினாா். கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழு உறுப்பினா்கள், மேற்பாா்வை பொறியாளா், திருவள்ளூா் செயற்பொறியாளா், அம்பத்தூா் செயற்பொறியாளா், திருவள்ளுா் (பொ), செயற்பொறியாளா், திருத்தணி (பொ), உதவி செயற்பொறியாளா்கள், சோலாா் நிறுவன முகவா்கள் கலந்து கொண்டனா்.