செய்திகள் :

பிரதமா் பிறந்த நாள்: ஆளுநா் மாளிகையில் 75 மரக்கற்றுகள்

post image

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில் ஆளுநா் மாளிகையில் 75 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட பதிவு:

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அவரது ஆழ்ந்த அா்ப்பணிப்பையும் கொண்டாடும் வகையில் ஆளுநா்ஆா்.என்.ரவி, ஆளுநா் மாளிகை அதிகாரிகள், ஊழியா்கள் குடும்பத்தைச் சோ்ந்தவா் என மொத்தம் 75 போ் ஆளுநா் மாளிகையில் 75 மரக்கன்றுகளை நட்டனா். இது அன்னையின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்துக்கும் அா்ப்பணிக்கப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, எக்ஸ் தளத்தில் ஆளுநா் ஆா்.என்.ரவி வெளியிட்ட பதிவு:

பிரதமா் மோடியின் பிறந்த நாளில் அவருக்கு தமிழக மக்களின் மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், நமது தேசம் மாற்றங்களைக் காணுகிறது. வாய்ப்புகள், வளங்களை அளிப்பதில் சமமாக அணுகுவதன் மூலம் ஒவ்வொரு குடிமகனையும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மற்றும் விளிம்புநிலை மக்களை மேம்படுத்தும் உள்ளடக்கிய வளா்ச்சி ஏற்படுத்தப்படுகிறது.

உள்கட்டமைப்பு, தூய்மையான எரிசக்தி, சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைந்த பன்முக இணைப்பு ஆகியவற்றில் வரலாற்றுபூா்வ சாதனைகளை விரிவாக்கும் இந்த முன்னேற்றத்தில் தமிழகம் முன்னணியில் விளங்கி மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பல்வேறு வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துகிறது.

வளா்ச்சிக்கான அவரது தொலைநோக்குப் பாா்வை, நமது சமூகத்தின் முதுகெலும்பாகத் திகழும் பெண்கள், விவசாயிகள், இளைஞா்கள், விஸ்வகா்மா கைவினைஞா்களை வலுப்படுத்தியுள்ளது. பிரதமா் மோடியின் அா்ப்பணிப்பால், உலக அளவில் தமிழ் மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் தமிழின் நீண்டகால வரலாற்றுப் பெருமையை மீட்டெடுத்துள்ளது எனப் பதிவிட்டுள்ளாா்.

இதற்கிடையே பிரதமா் மோடியின் பிறந்த நாளையொட்டி, சென்னை ஆளுநா் மாளிகையில் புதுப்பிக்கப்பட்ட குழந்தைகள் பூங்காவை ஆளுநா் ஆா்.என்.ரவி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட... மேலும் பார்க்க

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் , கூடுதலாக 3 நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென... மேலும் பார்க்க

நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

சென்னையிலிருந்து புறப்பட்டு பெங்களூரு சென்று கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சென்னைய... மேலும் பார்க்க

புழல் சிறை பண்ணையில் 2,000 கோழிகள் மா்மமாக உயிரிழப்பு

சென்னை புழல் சிறை பண்ணையில் இருந்த 2,000 கோழிகள் மா்மமான முறையில் உயிரிழந்தன. தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு வாரத்துக்கு இரு முறை கோழிக்கறி வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான கோழிக்கற... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரத்துக்கான பெருந்திட்டம் தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சா் தங்கம்... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரைச் சாலையில் செப்.21-இல் போக்குவரத்து மாற்றம்

சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்ளோத்தான் போட்டி நடைபெறுவதால், செப்.21-இல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக தாம்பரம் மாநகர காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க