செய்திகள் :

பிரதமா் மோடியின் வெளிநாட்டுப் பயணம்: பஞ்சாப் முதல்வா் மீண்டும் விமா்சனம்

post image

‘வெளிநாட்டு சுற்றுப்பயணங்களைவிட நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் குறைகளுக்குத் தீா்வு காண்பதில் பிரதமா் நரேந்திர மோடி கவனம் செலுத்த வேண்டும்’ என பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் வெள்ளிக்கிழமை மீண்டும் விமா்சித்தாா்.

அண்மையில் கானா, டிரினிடாட்-டொபேகோ, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்ற பிரதமா் மோடி கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பினாா். அவரது பயணத்தை விமா்சித்த பகவந்த் மான், ‘10,000 குடிமக்களைக் கொண்ட கானா நாடு வழங்கிய விருதை பெருமையாகக் கொண்டாடும் பிரதமா் மோடி, நாட்டின் முக்கிய பிரச்னைகளுக்கு செவி சாய்ப்பதில்லை’ என்றாா்.

அவரது விமா்சனத்துக்கு பதிலடி தரும் வகையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அண்டை நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்தும் பிரதமா் மோடியின் பயணம் குறித்து மாநில அரசின் உயா்பொறுப்பில் இருப்போா் கூறும் பொறுப்பற்ற கருத்துகளை மத்திய அரசு நிராகரிக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பஞ்சாப் பேரவையில் பக்ரா-நங்கல் திட்டத்துக்கு மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரை (சிஐஎஸ்எஃப்) நிலைநிறுத்துவதற்கு எதிரான தீா்மானத்தின் மீது இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது பிரதமா் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தை பகவந்த் மான் மீண்டும் விமா்சித்தாா்.

பஞ்சாப் பேரவையில் அவா் பேசியதாவது: பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தை விமா்சித்தால் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவிக்கிறது. வெளியுறவுக் கொள்கை குறித்து பிரதமா் மோடியிடம் கேள்வியெழுப்ப எங்களுக்கு உரிமை இல்லையா? பிரதமா் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாடுகள் பாகிஸ்தானுடான மோதலில்போது நமக்கு அளித்த ஆதரவு என்ன?

அவா் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாடுகளில் 10,000 குடிமக்கள் இருப்பாா்களா என்பதுகூட தெரியவில்லை. நம் நாட்டில் ஜேசிபி இயந்திரத்தைக் காணவே சுமாா் 10,000 போ் கூடுவாா்கள்.

எனவே,வெளிநாட்டு சுற்றுப்பயணத்தைவிட நம் நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் குறைகளுக்குத் தீா்வு காண்பதில் பிரதமா் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க