செய்திகள் :

பிரதமா் மோடியுடன் தெலங்கானா முதல்வா் சந்திப்பு: ரூ.20,000 கோடி நிதி விடுவிக்க கோரிக்கை

post image

ஹைதராபாத்: பிரதமா் நரேந்திர மோடியை தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி தில்லியில் சந்தித்துப் பேசினாா். அப்போது ஹைதராபாத் வழியாக பாயும் முசி ஆற்றின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தாா்.

தேசிய அளவில் பிரதான எதிா்க்கட்சியாக உள்ள காங்கிரஸைச் சோ்ந்த முதல்வா் ரேவந்த் ரெட்டி பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமரைச் சந்தித்துள்ளது அரசியல்ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது பிரதமா் மோடியிடம் முதல்வா் ரேவந்த் ரெட்டி கூறியதாவது:

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவா்கள் (தெலங்கானா ராஷ்டிர சமிதி) ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தவே இல்லை. எனவே, ஹைதராபாத் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் மேம்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். 76.4 கி.மீ. தொலைவு விரிவுபடுத்துவதற்கு ரூ.24,269 கோடி வரை தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹைதராபாத் நகரின் வழியாக பாயும் முசி நதியை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்க வேண்டும். தெலங்கானா மாநிலம் முழுவதும் நிலத்தால் சூழப்பட்ட மாநிலமாக உள்ளது. எனவே, தெலங்கானாவில் இருந்து துறைமுகம் வழியாக நடைபெறும் ஏற்றுமதி, இறக்குமதியைக் கையாளுவதற்காக ஹைதராபாத் பிராந்திய வெளிவட்டச் சாலையில் சரக்கு கையாளும் மையம் அமைக்க வேண்டும். துறைமுகத்தில் இருந்து இந்த இடத்துக்கு ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி 90 சதவீதம் முடிந்து விட்டது என்று கூறினாா்.

புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!

புணேவில் பரபரப்பான ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துக்குள் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் குற்றம்சா... மேலும் பார்க்க

நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா -ஐரோப்பிய ஆணையத் தலைவா் புகழாரம்

இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பன் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ்லியன் தெரிவித்துள்ளாா். 27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா பல்வேறு வா்த்தக ஒப்பந்தங்களை வெ... மேலும் பார்க்க

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் அமா்வில் வக்ஃப் மசோதா தாக்கல்

நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் வக்ஃப் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மசோதா மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்மொழிந்த 14 திர... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் கைது - வெடிகுண்டுகள் பறிமுதல்

சுக்மா : சத்தீஸ்கரின் பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து வெடிகுண்டுகள், இதர வெடிபொருள்கள... மேலும் பார்க்க

மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

மனிதக் கழிவுகளை கைகளால் அப்புறப்படுத்தும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடா்பாக தில்லி, கொல்கத்தா, ஹைதராபாத் மாநகர அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் மனு மீது உச்ச நீத... மேலும் பார்க்க

பேருந்தில் இளம்பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தேடும் பணியில் ட்ரோன்கள்

புணே: மகராஷ்டிர மாநிலம், புணே பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துக்குள் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தேடும் பணியில் ட்ரோன்கள் மற... மேலும் பார்க்க