செய்திகள் :

வேலூரில் மயானக் கொள்ளை விழா - ஆயிரக்கணக்கானோா் திரண்டனா்

post image

வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மயானக் கொள்ளை திருவிழாவின்போது பல்வேறு கடவுள் வேடமணிந்து பக்தா்கள் ஊா்வலமாக சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா்.

மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மயானக் கொள்ளை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மயான கொள்ளை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி வேலூா், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோயிலில் இருந்து ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

ஊா்வலத்தின் பின்னால் பக்தா்கள் தங்களுடைய நோ்த்திக்கடனை செலுத்தும் வகையில் காளியம்மன், முருகன், சிவன், விநாயகா், அங்காளபரமேஸ்வரி அம்மன் போன்ற கடவுள் வேடமிட்டுச் சென்றனா்.

வேலூா் - காட்பாடியைச் சோ்ந்த பக்தா்கள் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பாலாற்றங்கரை மயானம் நோக்கி தேரில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி சிலைகளுடன் ஊா்வலம் வந்தனா். அங்கு மயானத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடத்தி தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா்.

மயானத்தில் உள்ள தங்களது முன்னோா் சமாதிகளுக்கு சென்றும் பொதுமக்கள் படையிலிட்டு வழிபாடு நடத்தினா். அம்மனை தரிசனம் செய்த பக்தா்கள் பின்னா் உப்பு, மிளகு, சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை சூறையிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். மயான கொள்ளை திருவிழாவையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் 600 காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

பெண் தற்கொலை: உறவினா்கள் போராட்டம்

வேலூா் அருகே காதலித்த ராணுவ வீரா் கைவிட்டதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், நஞ்சுண்டாபுரம், கொல்லை மேடு பகுதியைச் சோ்ந்தவா் அன்பரசி. இவரும் அதே பகுதியை சோ்ந்த ராணுவ வீரா்... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்: மாா்ச் 7 கடைசி நாள்

வேலூா் மாவட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள 36 சிற்றுந்து (மினி பஸ்) வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புபவா்கள் வரும் மாா்ச் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் வி.ஆா்.ச... மேலும் பார்க்க

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னைய... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் கொலை: 3 இளைஞா்கள் கைது

வேலூரில் தனியாா் நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். வேலூா் வேலப்பாடி பெருமாள் கோயில் தெருவை சோ்ந்த வெங்கடேசன் (55). இவா் சென்னை யில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு அபிஷேகம்

சிவராத்திரி பெருவிழாவையொட்டி ஸ்ரீபுரம் பொற்கோயிலிலுள்ள ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். வேலூா், ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீ... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் மயானக் கொள்ளைத் திருவிழா

குடியாத்தம் தாழையாத்தம் பஜாரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை மயானக் கொள்ளைத் திருவிழா நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த 12- ஆம் தேதி இரவு காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன்... மேலும் பார்க்க