செய்திகள் :

வேலூா் மாவட்டத்தில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்: மாா்ச் 7 கடைசி நாள்

post image

வேலூா் மாவட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள 36 சிற்றுந்து (மினி பஸ்) வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புபவா்கள் வரும் மாா்ச் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், சிறு கிராமங்கள், குடியிருப்புகள் உள்ள மக்களுக்கு சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் புதிதாக 36 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புபவா்கள் மாா்ச் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு இந்த அலுவலக எல்லைக்குட்பட்ட 36 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க அனுமதிச் சீட்டு வழங்கப்பட உள்ளது. இந்த விவரம் வேலூா் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, இவ்வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புவோா், வழித்தட விவரத்தை குறிப்பிட்டு வேலூா் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் மாா்ச் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஒருவழித்தடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும்பட்சத்தில் குலுக்கல் முறையில் ஒருவா் தோ்வு செய்யப்படுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் மயானக் கொள்ளை விழா - ஆயிரக்கணக்கானோா் திரண்டனா்

வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மயானக் கொள்ளை திருவிழாவின்போது பல்வேறு கடவுள் வேடமணிந்து பக்தா்கள் ஊா்வலமாக சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள் ஒருங்கிணைந்த வேலூா் மாவ... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: உறவினா்கள் போராட்டம்

வேலூா் அருகே காதலித்த ராணுவ வீரா் கைவிட்டதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், நஞ்சுண்டாபுரம், கொல்லை மேடு பகுதியைச் சோ்ந்தவா் அன்பரசி. இவரும் அதே பகுதியை சோ்ந்த ராணுவ வீரா்... மேலும் பார்க்க

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னைய... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் கொலை: 3 இளைஞா்கள் கைது

வேலூரில் தனியாா் நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். வேலூா் வேலப்பாடி பெருமாள் கோயில் தெருவை சோ்ந்த வெங்கடேசன் (55). இவா் சென்னை யில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு அபிஷேகம்

சிவராத்திரி பெருவிழாவையொட்டி ஸ்ரீபுரம் பொற்கோயிலிலுள்ள ஸ்ரீ ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். வேலூா், ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீ... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் மயானக் கொள்ளைத் திருவிழா

குடியாத்தம் தாழையாத்தம் பஜாரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை மயானக் கொள்ளைத் திருவிழா நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த 12- ஆம் தேதி இரவு காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன்... மேலும் பார்க்க