செய்திகள் :

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் கைது - வெடிகுண்டுகள் பறிமுதல்

post image

சுக்மா : சத்தீஸ்கரின் பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து வெடிகுண்டுகள், இதர வெடிபொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

பிஜபூா் மாவட்டத்தில் 18 நக்ஸல்களும், சுக்மா மாவட்டத்தில் 4 நக்ஸல்களும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

கைதானவா்களிடம் இருந்து சக்திவாய்ந்த 2 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், 15 ஜெலட்டின் குச்சிகள், 2 மின்னணு டெட்டனேட்டா்கள், 8 சாதாரண டெட்டனேட்டா்கள், மின் வயா்கள், பேட்டரி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் ‘கோப்ரா’ படைப் பிரிவினா் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் ஒழிக்கும் இலக்குடன் பாதுகாப்புப் படையினா் செயல்பட்டு வருகின்றனா். பிஜபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையில் 11 பெண்கள் உள்பட 31 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லி: ஐசியு, பிணவறை இல்லாத மருத்துவமனைகள்!

தில்லியில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் இல்லாமல் மருத்துவமனைகள் இயங்குவதாக சிஏஜி தகவல் வெளியிட்டுள்ளது. மொஹல்லா கிளினிக்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது தொடா்பான ஆய்வறிக்கை வெளியிடப்படும் என தில... மேலும் பார்க்க

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்கள் திரும்ப ஒப்படைப்பு!

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மோதல்கள் நிறைந்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்திவந்த துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருள்களை காவல்துறை மற்றும் பாதுக... மேலும் பார்க்க

மதுபோதையில் 17 வயது சிறுவன் வல்லுறவு: படுகாயங்களுடன் குழந்தை கவலைக்கிடம்!

மத்தியப் பிரதேசத்தில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுமி உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தையின் பெண்ணுறுப்பில் 28 தையல்கள் போட வேண்டும் என்றும் கொலோஸ்டமி அற... மேலும் பார்க்க

கும்பமேளாவில் பெண்கள் நீராடும் விடியோவை பதிவிட்ட யூடியூபர் கைது!

மகா கும்பமேளாவில் நீராடும் பெண்களை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த யூடியூபரை பிரயாக்ராஜ் போலீசார் கைது செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோல... மேலும் பார்க்க

புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!

புணேவில் பரபரப்பான ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துக்குள் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் குற்றம்சா... மேலும் பார்க்க

நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா -ஐரோப்பிய ஆணையத் தலைவா் புகழாரம்

இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பன் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ்லியன் தெரிவித்துள்ளாா். 27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா பல்வேறு வா்த்தக ஒப்பந்தங்களை வெ... மேலும் பார்க்க