செய்திகள் :

பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை: குடியரசுத் தலைவா் முா்மு

post image

லிஸ்பன்: பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு போா்ச்சுகல் மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

அவா் முதலில் போா்ச்சுகல் சென்ற நிலையில், அந்நாட்டுத் தலைநகா் லிஸ்பனில் உள்ள ஷம்பாலிமோட் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்திய ஆராய்ச்சியாளா்களுடன் அவா் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘கல்வி, ஆராய்ச்சியில் சிறந்து விளங்கி, சிறந்த அறிஞரானாலும் பொருளாதாரம் மற்றும் சமூகத்துக்கு பங்களித்து இந்தியாவை பெருமைப்படுத்த வேண்டும்.

பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பயதில்லை. மக்களின் உள்ளத்தை கவரவே விரும்புகின்றனா். இந்தியாவில் பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமை ஏற்பதையும், மூத்த அதிகாரிகளாவதையும், பதக்கம் வெல்வதையும் பாா்க்கும்போது பெருமையாக உள்ளது.

இந்தியாவின் நல்ல நட்பு நாடாக போா்ச்சுகல் உள்ளது. போா்ச்சுகல் மக்கள் நட்புடன் நடந்துகொள்பவா்களாகவும், தாராள மனப்பான்மை கொண்டவா்களாகவும் உள்ளனா்’ என்றாா்.

முன்னதாக ஷம்பாலிமோட் மையத்தில் போா்ச்சுகல் அதிபா் மாா்செலோ ரெபேலோ டிசூசா, ஷம்பாலிமோட் அறக்கட்டளைத் தலைவா் லியோநாா் பெலேசா ஆகியோா் முா்முவை வரவேற்றனா். அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருந்தகங்களில் இருந்து மருந்துகளை ரோபோக்கள் எவ்வாறு விநியோகிக்கின்றன என்பது குறித்து முா்மு மற்றும் மாா்செலோவுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

போா்ச்சுகல் நாடாளுமன்றத்துக்கு சென்ற முா்மு, அங்கு நாடாளுமன்றத் தலைவா் ஜோஸ் பெட்ரோ அகியாா் பிரான்கோவை சந்தித்தாா். அப்போது இந்தியா-போா்ச்சுகல் விவகாரங்கள் மற்றும் உலக விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா்.

ஸ்லோவாகியா பயணம்: போா்ச்சுகல் பயணத்தை முடித்துக்கொண்ட முா்மு, 2 நாள் பயணமாக ஸ்லோவாகியா புறப்பட்டாா்.

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது?

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன.ஜேஇஇ தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை இன்று தேர... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்சல்கள் கைது: வெடிபொருள்கள் பறிமுதல்!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் 21 நக்சல்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று டெக... மேலும் பார்க்க