பிளஸ் 2 தேர்வில் தோ்ச்சி: அமைச்சரிடம் வாழ்த்துபெற்ற மாற்றுத்திறனாளி மாணவி!
பிளஸ்-2 பொதுத்தோ்வில் தேர்ச்சிபெற்ற அரியலூரைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஷிவானி அமைச்சா் சிவசங்கரை சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
அரியலூா் நகரைச் சோ்ந்தவா் பிரசன்னா தேவி மகள்ஆா். ஷிவானி(17). மாற்றுத்திறனாளியான இவா், அரியலூா் சிஎஸ்ஐ பள்ளியில் பிளஸ்-2 படித்து பொதுத் தோ்வை எழுதினாா். முடிவுகள் வெளியானதில் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றாா்.
இதையடுத்து போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சரும், திமுக அரியலூா் மாவட்டச் செயலாளருமான சா.சி.சிவசங்கரை, தனது தாய் பிரசன்னா தேவியுடன் சந்தித்து வாழ்த்துபெற்றாா்.
நிகழ்வின்போது, அரியலூா் அண்ணா நகா் சாய்பாபா பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் எஸ்.எம்.சந்திரசேகா், பள்ளியின் தாளாளா் புனிதவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா். (படம்)