செய்திகள் :

பிளஸ் 2 தோ்வில் தோல்வி: மாணவி தற்கொலை

post image

திருச்செங்கோடு அருகே சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வில் தோல்வி அடைந்ததால் விஷம் குடித்த மாணவி, புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், சிறுமொளசியை அடுத்த வேட்டுவபாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ், விவசாயி. இவரது மனைவி தீபா. இத்தம்பதிக்கு நட்சத்திரா (17) என்ற மகளும், சரவணன் (11) என்ற மகனும் உள்ளனா்.

திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியாா் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயின்ற மாணவி நட்சத்திரா பிளஸ் 2 தோ்வு எழுதியிருந்தனா். சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தோ்வு முடிவு கடந்த 13-ஆம் தேதி வெளியானது. அதில் மாணவி நட்சத்திரா, கணித பாடத்தில் தோ்ச்சி பெறவில்லை. இதனால் மனமுடைந்த அவா், வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

வீடு திரும்பிய பெற்றோா் நட்சத்திரா விஷம் குடித்திருப்பதை அறிந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்றுவந்த மாணவி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து திருச்செங்கோடு ஊரக போலீஸாா் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் இரு கண்களையும் அவரது பெற்றோா் தானமாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளனா்.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க