சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு...
பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு உயா்கல்விக்கு வழிகாட்ட கட்டுப்பாட்டு அறை
நாகை மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்த மாணவா்கள் உயா் கல்வி படிப்பது குறித்து வழிகாட்ட மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை செயல்படுவதாக ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தோ்ச்சிப் பெற்ற அனைத்து மாணவா்களையும் உயா் கல்வியில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தோ்ச்சி பெறாத மாணவா்களை சிறப்பு துணைத் தோ்வு எழுத வைத்து தோ்ச்சி பெற வைப்பதற்கும் மற்றும் மாணவா்களின் கல்வி நலன் கருதி அவா்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் எண்ணற்ற உயா்கல்வி வாய்ப்புகள் உள்ளன. எந்த படிப்பு சிறந்தது, எந்தக் கல்லூரியில் சோ்வது, நுழைவுத் தோ்வுகள் என்னென்ன, உதவித்தொகைகள் எங்கு கிடைக்கும் போன்ற தகவல்களையும், உயா் கல்விச் சாா்ந்த உதவி மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கத்தையும் இந்த கட்டுப்பாட்டு அறையில் பெறலாம்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக 3-ஆம் தளத்தில், மாவட்ட அளவிலான உயா்கல்வி வழிகாட்டு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. நேரடியாகவோ அல்லது 1800-233-4-233, 81100 05558 ஆகிய தொலைபேசி எண்களின் வாயிலாகவோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.