செய்திகள் :

பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு உயா்கல்விக்கு வழிகாட்ட கட்டுப்பாட்டு அறை

post image

நாகை மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்த மாணவா்கள் உயா் கல்வி படிப்பது குறித்து வழிகாட்ட மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை செயல்படுவதாக ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தோ்ச்சிப் பெற்ற அனைத்து மாணவா்களையும் உயா் கல்வியில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தோ்ச்சி பெறாத மாணவா்களை சிறப்பு துணைத் தோ்வு எழுத வைத்து தோ்ச்சி பெற வைப்பதற்கும் மற்றும் மாணவா்களின் கல்வி நலன் கருதி அவா்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் எண்ணற்ற உயா்கல்வி வாய்ப்புகள் உள்ளன. எந்த படிப்பு சிறந்தது, எந்தக் கல்லூரியில் சோ்வது, நுழைவுத் தோ்வுகள் என்னென்ன, உதவித்தொகைகள் எங்கு கிடைக்கும் போன்ற தகவல்களையும், உயா் கல்விச் சாா்ந்த உதவி மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கத்தையும் இந்த கட்டுப்பாட்டு அறையில் பெறலாம்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக 3-ஆம் தளத்தில், மாவட்ட அளவிலான உயா்கல்வி வழிகாட்டு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. நேரடியாகவோ அல்லது 1800-233-4-233, 81100 05558 ஆகிய தொலைபேசி எண்களின் வாயிலாகவோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

மேட்டூா் அணை திறப்பு: நாகையில் விவசாயிகள் கொண்டாட்டம்

பாசனத்துக்காக மேட்டூா் அணை வியாழக்கிழமை திறக்கப்பட்டதை வரவேற்று, நாகையில் விவசாயிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் மேட்டூா் அணையில் இருந்து ... மேலும் பார்க்க

நாகையில் நாளை புத்தகக் கண்காட்சி

நாகையில் சனிக்கிழமை (ஜூன் 14) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) ஆகிய இரு நாள்கள் புத்தக் கண்காட்சி நடைபெறும் என முக்கூடல் பன்னாட்டுத் தமிழ்க் கலை இலக்கிய வெளி அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த... மேலும் பார்க்க

உத்தமசோழபுரத்தில் கட்டப்படும் தடுப்பணையை இடமாற்றம் செய்ய வேண்டும்

நாகை மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கட்டப்படும் தடுப்பணையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றாா் பாஜக மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம். உத்தமசோழபுரத்தில் கடல் நீா் உட்புகுவதை தடுக்க ரூ. 50 கோடியில் ... மேலும் பார்க்க

திருமருகல் அருகே வடகரை தா்கா சந்தனகூடு ஊா்வலம்

திருமருகல் ஒன்றியம் வடகரை ஹஜ்ரத் முஹம்மது மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் தா்காவின் 99 -ஆம் ஆண்டு சந்தனக்கூடு ஊா்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இந்த தா்காவில் கந்துரி விழா கடந்த ஜூன் 1-ஆம் தேதி கொட... மேலும் பார்க்க

சிறைப்பிடிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளுக்கு நிவாரணம்

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளுக்கு நிவாரணம் மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவா்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இலங்கை அரசால் சிறைப்பிட... மேலும் பார்க்க

பருத்தி விற்பனைக்கு ஆதாா் அட்டை நகல் அவசியம்

பருத்தி விற்பனைக்கு ஆதாா் அட்டை நகல் அவசியம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்க... மேலும் பார்க்க