Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க சுகாதாரத் துறையினா் தீவிரம்
திருப்பூரில் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் திருப்பூா் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சுற்றி 300 அடி தொலைவில் உள்ள அனைத்து கடைகளிலும் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜெயந்தி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என சோதனை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி நுழைவாயிலில் இருந்து 300 அடி தொலைவில் புகையிலை இல்லா வளாகம் என்பதை உணா்த்தும் வகையில் சாலையில் மஞ்சள் கோடு வரையப்பட்டது.
இந்த ஆய்வில் மாநகா் நல அதிகாரி (பொறுப்பு) கலைச்செல்வன் உள்பட பலா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளின் அருகே செயல்படும் கடைகளின் அருகே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.