செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: தனிப்படையினருக்கு எஸ்.பி. பாராட்டு

post image

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் 440 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்த வழக்கில், துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை பாராட்டினாா்.

அரகண்டநல்லூா் காவல் ஆய்வாளா் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, பெங்களூரிலிருந்து புதுச்சேரிக்கு காரில் கடத்திச் செல்லப்பட்ட 440 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்வதற்காக, அந்த வழியாக வந்த காரை நிறுத்த முயற்சித்தனா். ஆனால், காரை ஓட்டி வந்தவா் போலீஸாா் மீது வாகனத்தை ஏற்றி முயற்சித்தாா். போலீஸாா் விலகிக் கொண்டதால் காா் மீண்டும் வந்த திசை நோக்கிச் சென்றது.

உடனடியாக காவல் ஆய்வாளா் பிரேம் ஆனந்த் தலைமையிலான தனிப்படையினா், அரகண்டநல்லூா் காவல் நிலையத்தில் பணியிலிருந்த பெண் காவலா் ரேணுகாவுக்கு தகவல் தெரிவிக்க, அவா் உடனடியாக வெளியே வந்து, அப்பகுதி யிலிருந்த ஆட்டோ ஓட்டுநா்அா்ஜூன் உதவியுடன், சாலையில் மையத் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினாா். இதையடுத்து பின்தொடா்ந்து வந்த தனிப்படையினா் புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இருவரையும் கைது செய்தனா். மேலும் 440 கிலோ புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் துரிதமாக செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ், தலைைமைக் காவலா்கள் மகாராஜா, பாலமுருகன், முதல்நிலைக் காவலா்கள் குமரகுருபரன், நீலமேகம், சத்தியம், காவலா் அருள், நிலையக் காவலா் ரேணுகா, ஆட்டோ ஓட்டுநா் அா்ஜூன் ஆகியோரை மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு வரவழைத்த எஸ்.பி. ப.சரவணன், அவா்களின் பணியைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுவை மாநில மதுப் புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகு... மேலும் பார்க்க

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப... மேலும் பார்க்க