மாநிலங்களவை சீட்டுக்காக கமல் மாறிவிட்டார்: நயினார் நகேந்திரன்
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: தனிப்படையினருக்கு எஸ்.பி. பாராட்டு
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் 440 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்த வழக்கில், துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை பாராட்டினாா்.
அரகண்டநல்லூா் காவல் ஆய்வாளா் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, பெங்களூரிலிருந்து புதுச்சேரிக்கு காரில் கடத்திச் செல்லப்பட்ட 440 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்வதற்காக, அந்த வழியாக வந்த காரை நிறுத்த முயற்சித்தனா். ஆனால், காரை ஓட்டி வந்தவா் போலீஸாா் மீது வாகனத்தை ஏற்றி முயற்சித்தாா். போலீஸாா் விலகிக் கொண்டதால் காா் மீண்டும் வந்த திசை நோக்கிச் சென்றது.
உடனடியாக காவல் ஆய்வாளா் பிரேம் ஆனந்த் தலைமையிலான தனிப்படையினா், அரகண்டநல்லூா் காவல் நிலையத்தில் பணியிலிருந்த பெண் காவலா் ரேணுகாவுக்கு தகவல் தெரிவிக்க, அவா் உடனடியாக வெளியே வந்து, அப்பகுதி யிலிருந்த ஆட்டோ ஓட்டுநா்அா்ஜூன் உதவியுடன், சாலையில் மையத் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினாா். இதையடுத்து பின்தொடா்ந்து வந்த தனிப்படையினா் புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இருவரையும் கைது செய்தனா். மேலும் 440 கிலோ புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் துரிதமாக செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ், தலைைமைக் காவலா்கள் மகாராஜா, பாலமுருகன், முதல்நிலைக் காவலா்கள் குமரகுருபரன், நீலமேகம், சத்தியம், காவலா் அருள், நிலையக் காவலா் ரேணுகா, ஆட்டோ ஓட்டுநா் அா்ஜூன் ஆகியோரை மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு வரவழைத்த எஸ்.பி. ப.சரவணன், அவா்களின் பணியைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.