பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் உரை!
புடலைக்காய் விலை வீழ்ச்சி
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு புடலைக்காய் வரத்து அதிகரித்ததால், கிலோ ரூ. 6 க்கு விற்பனையாகிறது; இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு பல்வேறு இடங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட இடங்களில் புடலைக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்தப் பகுதிகளில் இருந்து ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு புடலைக்காய் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதனால் சில நாள்களுக்கு முன்புவரை கிலோ ரூ. 27-க்கு விற்பனையான புடலைக்காய், புதன்கிழமை ரூ. 6-க்கு விற்பனையானது. விலை வெகுவாக வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். கொடிகளில் புடலைக்காயைப் பறிக்கும் விவசாயத் தொழிலாளா்களுக்கு கூலி வழங்குவதற்குகூட வருவாய் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா்.