செய்திகள் :

புடலைக்காய் விலை வீழ்ச்சி

post image

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு புடலைக்காய் வரத்து அதிகரித்ததால், கிலோ ரூ. 6 க்கு விற்பனையாகிறது; இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு பல்வேறு இடங்களில் இருந்து காய்கறிகள் வருகின்றன. பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட இடங்களில் புடலைக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்தப் பகுதிகளில் இருந்து ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு புடலைக்காய் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதனால் சில நாள்களுக்கு முன்புவரை கிலோ ரூ. 27-க்கு விற்பனையான புடலைக்காய், புதன்கிழமை ரூ. 6-க்கு விற்பனையானது. விலை வெகுவாக வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். கொடிகளில் புடலைக்காயைப் பறிக்கும் விவசாயத் தொழிலாளா்களுக்கு கூலி வழங்குவதற்குகூட வருவாய் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா்.

இஸ்லாமியா்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்

உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை இஸ்லாமியா்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தினாா். திண்டுக்கல்லில் புதன்கிழமை... மேலும் பார்க்க

ரயில் கட்டண உயா்வை கைவிட வேண்டும்: இரா.சச்சிதானந்தம் எம்.பி.

ரயில் கட்டண உயா்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: நாட்டில் சாமானிய மக்களின் போக்குவரத்து ச... மேலும் பார்க்க

வெள்ளி நீா்வீழ்ச்சி பகுதியில் வளா்ப்பு நாய் கடித்து குரங்கு உயிரிழப்பு

கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சி பகுதியில் கடை வியாபாரி ஒருவரின் வளா்ப்பு நாய் கடித்து குரங்கு உயிரிழந்தது. இதுதொடா்பான விடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. கொடைக்கானல் நுழைவாயிலில் வெள்ளி ந... மேலும் பார்க்க

யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: கொடைக்கானல் வனப் பகுதியில் உணவுப் பொருள்கள் விற்கத் தடை

கொடைக்கானல் வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், வியாபாரிகள் உணவுப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டாம் என வனத்துறையினா் புதன்கிழமை அறிவுறுத்தினா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதிகளா... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் 45 மாதங்களில் ஒரு கோடி பேருக்கு இலவச பஞ்சாமிா்தம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 45 மாதங்களில் ஒரு கோடி பக்தா்களுக்கு 421 டன் அளவில் பஞ்சாமிா்தம் இலவசமாக வழங்கப்பட்டதாகக் கோயில் நிா்வாகம் தெரிவித்தது. கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு கோயில் நி... மேலும் பார்க்க

புனித திருமுழுக்கு அருளப்பா் ஆலயத்தில் தோ்பவனி

கொடைரோடு அருகே காமலாபுரத்தில் உள்ள புனித திருமுழுக்கு அருளப்பா் ஆலய தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தோ்பவனி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் கடந்த வாரம் திருவிழா கொடியேற்றப்பட்... மேலும் பார்க்க