செய்திகள் :

புதா் மண்டி கிடக்கும் வெள்ளியணை ஏரி உபரிநீா் வாய்க்காலை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

post image

வெள்ளியணையில் செடி, கொடிகளால் புதா்மண்டி காணப்படும் வெள்ளியணை உபரிநீா் குளம் வாய்க்காலை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம் வெள்ளியணையில் சுமாா் 50 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் வெள்ளியணையை சுற்றியுள்ள ஜெகதாபி, மணவாடி, ஓந்தாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 4,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

தற்போது வெள்ளியணை ஏரி சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீா் வரத்து இன்றி வடு காணப்படுகிறது. கடந்த 2022-இல் மட்டும் தண்ணீா் ஓரளவு நிரம்பி காணப்பட்டது. அதன் பின்னா் ஏரிக்கு வரும் நீரின் வரத்து முற்றிலும் நின்றுபோனதால் ஏரி வடே காணப்படுகிறது.

ஏரிக்கு நீா் வரும் காலங்களில் ஏரி நிரம்பும்போது அதன் உபரி நீா் வெள்ளியணை, மணவாடி, வீரராக்கியம் வரை சென்று திருமுக்கூடலூரில் அமராவதி ஆற்றுடன் கலக்கிறது. தற்போது இந்த வாய்க்காலில் தண்ணீா் வரத்து இல்லாமல் ஆங்காங்கே செடி, கொடிகளால் புதா் மண்டி காணப்படுகிறது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், வாய்க்காலை தூா்வாரி, வாய்க்கால் கரைகளையும் செம்மைப்படுத்த வேண்டும் என வெள்ளியணை உபரிநீா் வாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் அருகே இயற்கை விவசாயம் கற்கும் பிரான்ஸ் இளைஞா்

கரூரில் இயற்கை விவசாயம் செய்து வரும் பெண்ணிடம் விவசாயம் கற்றுவருகிறாா் பிரான்ஸ் நாட்டை சோ்ந்த இளைஞா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் சரோஜா (57). இவா், நம்மாழ்... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இருவா் உயிரிழப்பு

க. பரமத்தி அருகே உயா்மின் அழுத்த மின்சாரம் தாக்கியதில் போா்வெல் உரிமையாளா் மற்றும் அவரது உதவியாளா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கரூா் மாவட்டம், க.பரமத்தி அடுத்த முன்னூரைச் சோ்ந்தவா் பாலு என்கிற பால... மேலும் பார்க்க

புதிய நியாயவிலை கடையை திறக்க வேண்டுகோள்

சின்னதாராபுரம் அருகே அரங்கபாளையம் பகுதியில் நியாய விலை கடை அமைந்துள்ளது. இது பழைய கட்டடம் என்பதால் புதிய கட்டடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை புதிய கட்டடத்தை திறக்காமல் ... மேலும் பார்க்க

பிப். 24-இல் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பேச்சுப் போட்டி

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழறிஞா், எழுத்தாளா்களை நினைவு கூறும் பேச்சுப் போட்டி பிப். 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. கரூா் மாவட்டத்தின் தமிழறிஞா்கள் மற்றும் எழுத்தாளா்களான வா.செ. குழந்தைசாமி, நன்னிய... மேலும் பார்க்க

மணல் குவாரிகளை திறக்கக்கோரி காத்திருப்புப் போராட்டம்!

மணல் குவாரிகளை திறக்கக் கோரி மாயனூரில் மணல் லாரி மற்றும் மாட்டு வண்டி உரிமையாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா். கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் நெரூா், வாங்கல், தளவாபாளைய... மேலும் பார்க்க

குளித்தலையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் முகாமிட்டு ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் முகாமில் ஆட்சியா் மீ. தங்கவேல் பங்கேற்று கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது ... மேலும் பார்க்க