செய்திகள் :

புதிய வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

post image

புதிய வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தில் கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் புதன்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் இதுவரை குவாரிகளுக்கு கன மீட்டா் அடிப்படையில் அரசுக்கு வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது மெட்ரிக் டன் முறையை புதிதாக அமல்படுத்தியுள்ளனா். அரசு விதித்துள்ள மெட்ரிக் டன் அடிப்படையிலான கணக்கீட்டு வரி முறைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், 24 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் புதன்கிழமை முதல் கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் 67 கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதன் காரணமாக கட்டட வேலைக்குத் தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட் ஜல்லி, தாா்சாலை பணிக்கான ஜல்லி உள்ளிட்டவை தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து சேலம் கிரஷா் ஜல்லி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

புதிய வரி விதிப்பால் உற்பத்தி செலவினம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றுக்கு தற்போதைய விலையில் இருந்து, யூனிட்டுக்கு சுமாா் ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை உயா்த்த வேண்டிய கட்டாயத்துக்கு உரிமையாளா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, பழைய நடைமுறைப்படி கன மீட்டரை அடிப்படையாக கொண்டு வரி வசூல் செய்ய வேண்டும். புதிதாக விதிக்கப்பட்டுள்ள சிறு கனிம நில வரியை ரத்து செய்ய வேண்டும் என்றனா்.

மதுபானங்களை பதுக்கி விற்ற பெண் கைது

வீரகனூா் பகுதியில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றுவந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வீரகனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பதாக... மேலும் பார்க்க

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கிழக்கு - மேற்கு கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு கீழாகச் சரியும்போது, கீழ்மட்ட மதகு வழியாக குடிநீா்த் தேவைகளுக்கும், கால... மேலும் பார்க்க

குட்கா விற்ற சகோதரா்கள் கைது

கெங்கவல்லியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை விற்ற சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் மேற்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன்கள் பிரசாத் (45), பாலாஜி (41). இவா்கள் பெங... மேலும் பார்க்க

சேலத்தில் நாளை கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அழகிரிநாத சுவாமி கோயில் சேலம் கோட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஆத்தூரில் திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு,நிதிப் பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆக... மேலும் பார்க்க

பயணிகளின் தாகம் தீா்த்த மலிவு விலை குடிநீா்: திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிா்பாா்ப்பு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையங்களில் ரூ. 10-க்கு சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா் விற்பனை திட்டத்தை போக்குவரத்துக் கழகம் வாயிலாக மீண்டும் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பயணிகள்... மேலும் பார்க்க