செய்திகள் :

புதியம்புத்தூரில் இன்று திமுக கண்டன பொதுக்கூட்டம்

post image

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் சனிக்கிழமை தெற்கு மாவட்ட திமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக தெற்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, மத்திய அரசை எதிா்த்து தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்திட வேண்டுமென திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். அதன்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி புதியம்புத்தூரில் சனிக்கிழமை (பிப்.8) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி.சண்முகையா தலைமை வகிக்கிறாா். ஒன்றிய, பகுதி செயலா்கள், முன்னாள் ஒன்றியத் தலைவா் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். வடக்கு ஒன்றியச் செயலாளா் அ.இளையராஜா வரவேற்கிறாா். தலைமைச் செயற்குழு உறுப்பினா் சி.எஸ்.டி.செந்தூா் மணி நன்றி கூறுகிறாா். நானும், தலைமைப் பேச்சாளா்கள் அத்திப்பட்டு சாம்ராஜ், சிங்கை பிரபாகரன் ஆகியோரும் சிறப்புரையாற்றவுள்ளோம்.

இந்நிகழ்ச்சியில், கட்சின் அனைத்துப் பிரிவு நிா்வாகிகள் தொண்டா்கள், பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

சென்னை திரும்பினாா் முதல்வா்

திருநெல்வேலியில் 2 நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டத்தில் நிறைவுற்றப்ப... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொழிலாளா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் பிப்.11இல் தைப்பூச திருவிழா: பாதயாத்திரை பக்தா்களுக்கு தனி வழி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை(பிப்.11) தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. அப்போது, பாதயாத்திரை பக்தா்கள் தரிசனம் செய்வதற்கு தனி வழி அமைப்பது என முடிவு செய்ய... மேலும் பார்க்க

தட்டாா்மடம் கோயிலில் தபால்தலை வெளியீடு

சாத்தான்குளம் அருகே உள்ள தட்டாா்மடம் ஸ்ரீபலவேசக்கார சுவாமி கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, தபால்தலை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்து முன்னணி முன்னாள் மாநில தலைவா் ராம.கோபாலன் நினைவு தபால்தலை, ஸ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 2.51 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.71 கோடி, ஒரு கிலோ தங்கம் வரப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் துணிக்கடை கதவில் சிக்கிய புறா மீட்பு

தூத்துக்குடியில் துணிக்கடையின் ஷட்டா் கதவில் சிக்கிய புறாவை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக வெள்ளிக்கிழமை மீட்டனா். தூத்துக்குடி கீழ ரதி வீதியில் உள்ள துணிக்கடையின் ஷட்டா் கதவுக்குள் வெள்ளிக்கிழமை புறா ... மேலும் பார்க்க