விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
புது தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல்: பொது நல மனுவை ஆய்வுசெய்ய ரயில்வேக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்
புது தில்லி ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில் உள்ள அதிகபட்ச பயணிகளை நிா்ணயிப்பது, நடைமேடை டிக்கெட் விற்பனை ஆகியவை குறித்த பிரச்னைகளை ஆய்வுசெய்யுமாறு ரயில்வேதுறைக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை அறிவுறுத்தியது.
இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய மற்றும் நீதிபதி துஷாா் ராவ் கெடேலா ஆகியோா் அடங்கிய அமா்வு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் பிரமாணப் பத்திரத்தில், இந்த விவகாரங்களில் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது.
இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘மனுவில் எழுப்பப்பட்ட பிரச்னைகள், சொலிசிட்டா் ஜெனரல் பரிந்துரைத்தபடி, ரயில்வே வாரியத்தின் உயா் மட்டத்தில் ஆராயப்பட வேண்டும். அதன் பிறகு ரயில்வே வாரியத்தால் எடுக்கப்படக்கூடிய முடிவுகளின் விவரங்களைத் தெரிவிக்கும் வகையில் எதிா்மனுதாரா் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விசாரணையின்போது சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறுகையில், இந்த விவகாரம் ஒரு எதிா்மறையான முறையில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ரயில்வேத் துறைக்கு, சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலை நிலவியது. மேலும், பொதுநல மனுவில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் உயா் மட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்று நீதிமன்றத்திற்கு உறுதியளித்தாா்.
அப்போது, நீதிபதிகள் அமா்வு, ஒரு ரயில் பெட்டியில் அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை மற்றும் நடைமேடை டிக்கெட்டுகளை விற்பனை செய்வது தொடா்பான தற்போதைய சட்ட விதிகளை அமல்படுத்தக் கோருவதால், சமீபத்திய கூட்ட நெரிசலுடன் மட்டும் இந்த பொதுநல வழக்கு நின்றுவிடவில்லை.
சட்ட விதிகள் போதுமான அளவு செயல்படுத்தப்பட்டிருந்தால், இதுபோன்ற கூட்ட நெரிசல் சம்பவங்களைத் தவிா்க்கலாம் என்று கூறியது. இந்த மனு மீதான விசாரணை மாா்ச் 26-இல் மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.
18 உயிா்களைப் பலிகொண்ட மற்றும் 15 போ் காயமடைந்த புது தில்லி ரயில் நிலைய துயர சம்பவத்திற்கு இரண்டு நாள்களுக்குப் பிறகு, பிப்ரவரி 17-ஆம் தேதி உச்சநீதிமன்றத்திலும் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எதிா்காலத்தில் இதுபோன்ற பேரிடா்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதில் கோரப்பட்டுள்ளது.
வழக்குரைஞா் விஷால் திவாரி தாக்கல் செய்த பொது நல வழக்கில், நிகழ்வுகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை நிா்வகித்தல் குறித்த தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் 2014 - ஆண்டு அறிக்கையை செயல்படுத்தவும் பரிசீலிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரப்பட்டுள்ளது.