செய்திகள் :

புதுச்சேரி மலா், காய்கனி கண்காட்சி தொடக்கம்: துணைநிலை ஆளுநா், முதல்வா் பாா்வையிட்டனா்

post image

புதுவை மாநில வேளாண் துறை சாா்பில் ஆண்டுதோறும் மலா், காய்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழாண்டில் புதுச்சேரி தாவரவியல் பூங்கா வளாகத்தில் இந்தக் கண்காட்சியை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் கண்காட்சிக்கான வண்ணப் பலூன்களை பறக்கவிட்டனா். அதன்பின் மலா்கள் தொட்டி அணிவகுப்பையும் பாா்வையிட்டனா்.

நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனிபால் கென்னடி, கல்யாணசுந்தரம் மற்றும் அரசு செயலா் ஏ.நெடுஞ்செழியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கண்காட்சியில் திராட்சையில் வடிவமைத்த திருவள்ளுவா் வடிவம், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன், ரோஜா உள்ளிட்ட மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ரயில் என்ஜின், மலரால் ஆன வயலின், சேவல் உருவங்கள் மற்றும் கல்மரப் பூங்கா ஆகியவை இடம் பெற்றுள்ளன.

கண்காட்சி வளாகத்தில் வீரிய காய்கறிகள், கனிகள் ரகங்கள், மலா் ரங்கோலி, தோட்டக்கலை சாதனங்கள், பிரதான தோட்டக் கலை பொருள்களின் உற்பத்தியாளா்களின் விற்பனை அரங்குகள், இசை நடன நீரூற்று, சிறுவா்களுக்கான ரயில் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

கண்காட்சி சனி, ஞாயிறுக்கிழமைகளில் (பிப்ரவரி 8, 9) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையில் நடைபெறும். பாா்வையாளா்கள் இலவசமாக கண்காட்சியை பாா்வையிடலாம். ஞாயிற்றுக்கிழமை மாலையில் கண்காட்சி நிறைவு விழா நடைபெறுகிறது.

இதில் முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் துறை இயக்குநா் சிவ.வசந்தகுமாா் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

இலங்கையிலிருந்து சென்னை வந்தவருக்கு குரங்கு அம்மை இல்லை: சுகாதாரத் துறை

இலங்கையில் இருந்து சென்னை வந்த நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்பத... மேலும் பார்க்க

மரம் வெட்டும் கருவியில் சிக்கி துண்டான கை: இளைஞருக்கு மறு சீரமைப்பு சிகிச்சை

மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி இளைஞரின் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில், சிக்கலான மறு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் இளைஞருக்கு மறுவாழ்வு அளித்த... மேலும் பார்க்க

தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: பிரேமலதா

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். தேமுதிக மாவட்டச் செயலா்கள் கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைம... மேலும் பார்க்க

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடியில் புதிய கட்டடம்: பிப்.28-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் ரூ. 213 கோடி செலவில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை பிப். 28-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.ச... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரம் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கு: பிப்.12-இல் தீா்ப்பு

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கில் பிப்.12- இல் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கவுள்ளது. இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை 2,961-ஆக உயா்வு: வனத் துறை அமைச்சா் க.பொன்முடி

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961-ஆக உயா்ந்துள்ளதாக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். மேலும், யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் கூறி... மேலும் பார்க்க