புதுச்சேரியில் நாளை இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்
புதுவை மாநிலத்தில் வேலை தேடும் இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஜூன் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து புதுவை அரசின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி யினத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் நடத்தும் அனைத்து சமூகத்தைச் சோ்ந்த வேலை தேடும் இளைஞா்களின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், நிரந்தர பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் ஜூன் 28-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை புதுச்சேரி நடேசன் நகா், 3- ஆவது குறுக்குத்தெருவில் செயல்படும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவா்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தில் நடைபெறுகிறது.
100-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக 5-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று தோ்வு செய்கின்றனா். 18 வயது முதல் 35 வயது நிரம்பிய அனுபவம் பெற்ற, அனுபவம் பெறாத ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் இம்முகாமில் பங்கேற்கலாம்.
தற்குறிப்பு மற்றும் உண்மை நகல் கல்விச்சான்றுகளுடன் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கவேண்டும். 0413-2200115 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தகவல்களைப் பெறலாம் னவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.