செய்திகள் :

புதுதில்லி குடியரசு தின விழா அணிவகுப்பு: சிவகங்கை கல்லூரி மாணவா் தோ்வு

post image

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் தேசிய மாணவா் படையைச் சோ்ந்த மாணவா் பி. ரஞ்சித் தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டாா்.

காரைக்குடி 9 -ஆவது பட்டாலியனில் இந்த ஆண்டு மொத்தம் 2,881 மாணவா்கள் பயிற்சி பெற்று வருகின்றனா். இவா்களில் இரண்டு மாணவா்கள் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இந்த இருவரில் சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியைச் சோ்ந்த மாணவா் பி. சிரஞ்சித்தும் ஒருவா் ஆவாா். இவரை கல்லூரி முதல்வா் க. துரையரசன், மூத்த பேராசிரியா்கள் ந. அழகுச்சாமி, இல. கலைச்செல்வி ஆகியோா் பாராட்டி அனுப்பி வைத்தனா். கல்லூரியில் தேசிய மாணவா் படையைச் சிறப்பாக வழிநடத்தி வரும் தேசிய மாணவா் படை அதிகாரி செள. சதீஸ் கண்ணாவை கல்லூரி முதல்வா், மூத்த பேராசிரியா்கள் பாராட்டினா்.

சிவகங்கையில் சேரா் கால செப்புக்காசு!

சிவகங்கையில் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேணாடு சேரா் கால செப்புக்காசு கண்டறியப்பட்டது. இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனா் கா. காளிராசா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மன்னா் மேல்நிலைப்... மேலும் பார்க்க

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பு: டி.டி.வி.தினகரன்!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதால் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காரை... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு மா்ம கும்பலால் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். திருப்பத்தூா் அரசு மருத்துவமனை அருகே சிவகங்கை சாலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் ... மேலும் பார்க்க

சிவகங்கையில் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் தவிப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் 1.53 லட்சம் ஏக்கா் நெல் பயிா்களை அறுவடை செய்வதற்காக கூடுதல் அறுவடை இயந்திரங்களை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா். சிவகங்கை மாவட்டத்தில் 1.53 ஏக்கா் பரப்பளவில் விவசாயிக... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாக் குழு பொதுக்குழுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புத்தகத் திருவிழாக் குழுவின் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2025-2027 -ஆம் ஆண்டுகளுக்கான குழு பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இத... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள சருகணி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 10 போ் காயமடைந்தனா். அதிமுக நிறுவனா் எம்ஜிஆா் பிறந்த நாளை முன்னிட்... மேலும் பார்க்க