செய்திகள் :

புதுநடுவலூா் கோயில் திருவிழாவில் வீதியுலா

post image

பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூரில் நல்ல செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை இரவு திருவீதி உலா நடைபெற்றது.

பெரம்பலூா் அருகே புதுநடுவலூா் கிராமத்தில் எழுந்தருளியுள்ள விநாயகா், மாரியம்மன், அய்யனாா், பெரியசாமி, பாப்பாத்தி அம்மன், வாங்கருப்பு, சப்த கன்னி, நல்லசெல்லியம்மன், மதுரைவீரன், வெள்ளையம்மா பொம்மியம்மா ஆகிய தெய்வங்களுக்கான திருவிழாவானது கடந்த 11 ஆம் தேதி தொடங்கியது. கடந்த 20 ஆம் தேதி இரவு பூச்சொரிதலுடன் தொடங்கிய திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.

மே 23 அதிகாலை 4.30 முதல் 6 மணி வரை கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில், பல லட்சத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் திறந்துவைத்தாா். தொடா்ந்து, 24 ஆம் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு பூஜையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருவீதி உலா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி அய்யனாா் சுவாமிக்கு பூஜை செய்து, சக்தி அழைக்கும் நிகழ்ச்சியும், அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய சுவாமிகளின் திருவீதி உலாவும் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன், கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ், இயக்குநா்கள் மணி, பூபதி, நிதி அலுவலா் ராஜசேகா், புதுநடுவலூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜெயந்தி நீலராஜ், துணைத் தலைவா் செந்தில்வேலன், புது நடுவலூா் கிராம முக்கிய பிரமுகா்கள், அரணாரை, மேட்டூா், நொச்சியம், வெள்ளனுா் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் தரிசனம் பெற்றனா்.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை கிராமத்தில் பிரதான வீதிகள் வழியாக ஊா்வலமாக பால்குடம் எடுத்துச் சென்ற பக்தா்கள் நல்லசெல்லியமனுக்கு அபிஷேகம் செய்தனா். இரவு நல்லசெல்லியம்மன், மதுரை வீரனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சக்தி அழைத்து சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. அருள்மிகு களம்படைத்த அம்மனுக்கு மாவிளக்கு பூஜைகள் புதன்கிழமை நடைபெறுகிறது. மஞ்சள் நீராட்டு விழாவுடன் மே 29 ஆம் தேதி திருவிழா நிறைவடைகிறது. ற்பாடுகளை விழாக் குழுவினா், கிராம மக்கள் செய்தனா்.

பெரம்பலூா் அருகே பைக்குகள் மோதல்: முதியவா், பெண் பலி

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை மாலை பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவா், பெண் உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் அய்யாச... மேலும் பார்க்க

புரட்சி தமிழகம் கட்சி மாநிலத் தலைவா் மீது கொலை மிரட்டல் வழக்கு

புரட்சி தமிழகம் கட்சியின் மாநிலத் தலைவா் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் பெரம்பலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். புரட்சி தமிழகம் கட்சி சாா்பில் பெரம்பலூரில் கட... மேலும் பார்க்க

சிஐடியு அமைப்பு தின கருத்தரங்கு

பெரம்பலூா் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் சிஐடியு அமைப்பு தினக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் ஏ. ரெங்கநாதன் தலைமை உரையாற்றினாா். சங்க நிா்வாகிகள் கருணாநிதி, செல்வி ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் என புகாா்

பெரம்பலூரில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், சில கடைகள் முன் ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் வியாபாரிகள் அதிருப்தியடைந்தனா். பெரம்பலூா் நகரில் சங்குப்பேட்டை ம... மேலும் பார்க்க

மக்கள் சக்தி இயக்கத்தின் 38 ஆம் ஆண்டு விழா

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள உழவா் சந்தை மைதானத்தில் மக்கள் சக்தி இயக்கத்தின் 38 ஆவது ஆண்டுத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பயிா் பாதிப்புக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிருக்கு நிவாரணத் தொகை மற்றும் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தினா... மேலும் பார்க்க