செய்திகள் :

புதுப்பேட்டை மீனவா் கிராமத்தில் மீன்பதப்படுத்தும் கூடத்துக்கு அடிக்கல்

post image

தரங்கம்பாடி அருகேயுள்ள புதுப்பேட்டை மீனவா் கிராமத்தில் மீன்பதப்படுத்தும் கூடம் கட்ட புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

2 ஆயிரம் போ் வசிக்கும் இந்த கிராமத்தில் 7 விசைப்படகுகள், 90 இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி நாரிழைப் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் மீனவா்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். இந்நிலையில், மீன்களை சுகாதாரமான முறையில் விற்பனை செய்யவும், மீன்பிடி வலைகளை சரி செய்ய போதிய வசதிகள் இல்லாததால் சிரமப்பட்டு வந்தனா்.

கடற்கரையோர பகுதியில் வசதிகளை அமைத்து தர அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, மீனவா்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் ரூ. 2 கோடியில் மீன் பதப்படுத்தும் கூடம், வலைப்பின்னும் கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தாா்.

இதில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் மோகன்குமாா், உதவி செயற்பொறியாளா் ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை அரசு கலைக் கல்லூரியில், பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அஜிதா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ‘வானவில்’ தொண்டு நிறுவன இயக்குநா் ர... மேலும் பார்க்க

புகையிலை விற்பனை: கடைகளில் சுகாதாரத் துறையினா் சோதனை

நாகை நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை விற்பனை தடுப்பு சோதனையில், பொது சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள், பள்ளி வளாகத்தைச் சுற்... மேலும் பார்க்க

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி

நாகையில் அனைத்து துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசு ஓய்வூதியா்களை பணி ஓய்வு அடிப்படையில் பிரித்து, அதன்படி ஓய்வூதியம் அறிவிக்க திட்டமிட்... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அந்தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் நடைபெற்றது. நாகை: நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பால் உற்பத்தி மற்... மேலும் பார்க்க

மனநலம் பாதித்தவரை தாக்கியவா் கைது

நாகை அருகே வீட்டின் மீது கல் எறிந்த மனநலம் பாதிக்கப்பட்டவரைத் தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா். இதுகுறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்தி: கீழையூா் அருகேயுள்ள திருப்பூண்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: கோயில்களில் சிறப்பு வழிபாடு

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆடி அமாவாசையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாகை: நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் கல்யாணசுந்தரா்-கோகிலாம்பாள் புதிய கடற்கரைக்கு எழுந்தருளி பக்... மேலும் பார்க்க