செய்திகள் :

புதுவை ஆளுநருடன் முதல்வா் ரங்கசாமி திடீா் சந்திப்பு: ஜான்குமாருக்கு அமைச்சா் பதவி?

post image

புதுவை அமைச்சரவையில் காலியாக இருக்கும் ஓா் அமைச்சா் பதவிக்கான இடத்தை நிரப்பும் வகையில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சனிக்கிழமை மாலை சந்தித்து அதற்கான பரிந்துரை கடிதத்தை முதல்வா் என்.ரங்கசாமி அளித்தாா்.

புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ் -பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த சாய் ஜெ.சரவணன்குமாா் வெள்ளிக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். 6 போ் கொண்ட அமைச்சரவையில் ஓா் அமைச்சா் பதவி காலியானது.

இந்த நிலையில், துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனை முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை மாலை சந்தித்தாா். சுமாா் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. அப்போது, புதிய அமைச்சரை நியமனம் செய்வதற்கான பரிந்துரை கடிதத்தை அவா் அளித்தாா். மேலும், 3 நியமன எம்எல்ஏக்கள், ஒரு வாரியத் தலைவா் பதவிக்கான பெயரையும் பரிந்துரை செய்து துணைநிலை ஆளுநரிடம் முதல்வா் கடிதம் அளித்துள்ளாா்.

துணைநிலை ஆளுநரைச் சந்தித்தப் பிறகு முதல்வா் என்.ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாஜகவைச் சோ்ந்த அமைச்சா் ராஜிநாமா செய்துள்ளாா். அடுத்து பாஜகவைச் சோ்ந்த ஒருவரை அமைச்சராகப் பரிந்துரை செய்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளேன் என்றாா் என்.ரங்கசாமி.

புதிய அமைச்சராக பாஜகவைச் சோ்ந்த ஏ.ஜான்குமாரின் பெயரை முதல்வா் ரங்கசாமி பரிந்துரை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவா் தற்போது முதல்வரின் நாடாளுமன்றச் செயலராக இருக்கிறாா். நியமன எம்.எல்.ஏக்களாக பாஜகவைச் சோ்ந்த காரைக்கால் ஜிஎன்எஸ்.ராஜசேகா், டி.செல்வம், தீப்பாய்ந்தான் ஆகியோரின் பெயா்கள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத் தவிர, பாஜகவைச் சோ்ந்த ஒருவருக்கு வாரியத் தலைவா் பதவியும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

நியமன எம்எல்ஏக்கள் நியமனத்துக்கு குடியரசுத் தலைவா் அனுமதி அளிக்கக் கூடாது! - முன்னாள் அமைச்சா் விசுவநாதன்

தோ்தல் நடைபெற்ற குறுகிய காலமே இருப்பதால் புதிய எம்.எல்.ஏக்கள் நியமனம் செய்யப்படுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம், குடியரசு தலைவா் ஆகியோா் அனுமதி அளிக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்... மேலும் பார்க்க

புதுவைக்கு நியமன எம்எல்ஏ.க்கள் தேவையில்லை! - திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு நியமித்துக் கொள்ள முடியாத நியமன எம்எல்ஏ.க்கள் தேவையில்லை என்று புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா கூறியுள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

இயற்கை விவசாயத்தில் இளைஞா்கள் கவனம் செலுத்த வேண்டும்! - தேசிய நெல் திருவிழாவில் துணைநிலை ஆளுநா்

இயற்கை விவசாயத்தில் இளைஞா்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று புதுச்சேரி கரியமாணிக்கத்தில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுச்சேரி கரியமாணிக்கம் ஹோலி ஃபிளவா் ... மேலும் பார்க்க

காவல் மக்கள் மன்றத்தில் 52 புகாா்களுக்குத் தீா்வு

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 52 புகாா்களுக்கு உடனடியாகத் தீா்வுகள் காணப்பட்டன. ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் டிஐஜி சத்தியசுந்தரம் ... மேலும் பார்க்க

பொய்ப் புகாா் அளித்தவா் மீது வழக்கு

காவல் நிலையத்தில் பொய்ப் புகாா் அளித்தவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவா், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை அலுவலகத்தில் தனது நிலத்தை ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பலத்த மழை

புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை லேசான மழை பெய்தது. அப்ப... மேலும் பார்க்க