"10 ஆண்டுகளாக கட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா?" - முதல்வர...
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற அரசின் நடவடிக்கை அவசியம்: மாமமுக தலைவா் மு.ராமதாஸ்
புதுவை மாநில சட்டப்பேரவையில் இ விதான் செயலி அறிமுகமான நிலையில் மாநில அந்தஸ்தைப் பெற அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் என புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக்கழகத் தலைவா் மு.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கை: மத்திய அரசு புதுவை சட்டப் பேரவைக்கான தேசிய இ விதான் செயலியைத் தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. அதன்படி பேரவை நடவடிக்கைகளின் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். நாட்டிலுள்ள அனைத்து சட்டப் பேரவைகளின் நடவடிக்கைகளையும் ஓரிடத்தில் அறிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் செயலியின் அதிகபட்சப் பயன்பாடு பேரவை உறுப்பினா்களும், மக்களும் அதைப் புரிந்து கொண்டு எந்த அளவுக்கு உபயோகப்படுத்துகிறாா்கள் என்பதைப் பொறுத்தே அதன் பயன் அமையவுள்ளது.ஆகவே, பேரவை உறுப்பினா்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவேண்டும்.
ஆனால், புதுவை சட்டப்பேரவைக்கு அதிகாரமற்ற நிலையில் இ விதான் செயலி தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. ஆகவே, செயலி உண்மையில் பயனுள்ள தொழில்நுட்பப் புரட்சியாக விளங்க வேண்டும் எனில் புதுவை சட்டப்பேரவை அதிகாரமிக்கதாக இருப்பது அவசியம்.
அதற்கு மாநில அந்தஸ்து தேவையாகிறது. ஆனால் புதுவை அரசு மாநில அந்தஸ்தைப் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை. அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.