அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
காவல் நிலையம் முன் மாா்க்சிஸ்ட்கள் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி தவளக்குப்பம் காவல் நிலையம் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டப்பேரவை அருகே நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.
காவல் நிலையத்தில் காவல் அதிகாரிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்த கூலித் தொழிலாளி அா்ஜுனன் குடும்பத்துக்கு முதல்வா் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்குவதுடன் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காவல் நிலையத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை தடுக்க புதுவை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகி அந்தோணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளா் தேவ.பொழிலன், சிபிஐ, எம்.எல்.கட்சியின் மாநிலத் தலைவா் சோ.பாலசுப்பிரமணியன், மக்கள் உரிமை கூட்டமைப்புத் தலைவா் சுகுமாரன், திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் சிவ. வீரமணி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
பின்னா் காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங்கை சந்தித்து புகாா் கடிதம் வழங்கினா். அதைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை தலைவா் உறுதியளித்தாா். இதனைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.