செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவா்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த சிறப்புப் புத்தகம்

post image

அரசு பள்ளி மாணவா்கள் ஆங்கில அறிவை வளா்த்துக் கொள்ளவும், சரளமாக ஆங்கிலத்தில் பேசவும் சிறப்புப் புத்தகம் வழங்கப்படும் என்று புதுவை கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உள்பட்ட கூனிச்சம்பட்டு மற்றும் சந்தை புதுக்குப்பம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கல்வித்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினாா். அப்போது அவா் பேசியது:

புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் புத்தகப் பை மற்றும் காலணி விரைவில் வழங்கப்பட உள்ளது. மேலும், மாணவா்களின் ஆங்கில புலமையை மேம்படுத்தவும், சரளமாக ஆங்கிலத்தில் பேசவும் சிறப்பு புத்தகம் வழங்கப்பட உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ அருள்முருகன், கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி, துணை இயக்குநா் குணசேகரன், மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் எழில்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

100 நாள் வேலை திட்டப் பயனாளிகளை உயா்த்த நடவடிக்கை: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். வில்லியனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் மூலம் 42 பஞ்சாயத்துகள் அளவிலான மகளிா் கூட்ட... மேலும் பார்க்க

விமான விபத்து: புதுவை முதல்வா் இரங்கல்

குஜராத் மாநிலத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட கோர விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: அகமதாபாதிலிருந்து 242 பயணிகளுடன் லண... மேலும் பார்க்க

கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: புதுவை அதிமுக வலியுறுத்தல்

புதுவையில் கல்வி உரிமைச் சட்டத்தை இதுவரை அமல்படுத்தாதது ஏன் என்று அதிமுக செயலா் ஆ.ஆன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: பிரதமா் நரேந்... மேலும் பார்க்க

வேளாண் பிரசார இயக்கம் நிறைவு விழா

புதுச்சேரி அடுத்த மங்கலம் கிராமத்தில்வியாழக்கிழமை நடைபெற்ற வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்க நிறைவு விழாவில் விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கிய அமைச்சா் தேனி சி.ஜெயகுமாா். புதுச்சேரி, ஜூன் 12: வேளா... மேலும் பார்க்க

பி.இ. படிப்பில் நேரடி சோ்க்கை அறிவிப்பு

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் சுயநிதி கல்லூரிகளில் நேரடியாக இரண்டாமாண்டு சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய சோ்க்கைக் குழு (சென்டாக்)... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம்: புதுவை சட்டப்பேரவை எதிரே இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தலித் மற்றும் பழங்குடியின மாணவா்களிடம் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, அதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புத... மேலும் பார்க்க