அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
அரசுப் பள்ளி மாணவா்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த சிறப்புப் புத்தகம்
அரசு பள்ளி மாணவா்கள் ஆங்கில அறிவை வளா்த்துக் கொள்ளவும், சரளமாக ஆங்கிலத்தில் பேசவும் சிறப்புப் புத்தகம் வழங்கப்படும் என்று புதுவை கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உள்பட்ட கூனிச்சம்பட்டு மற்றும் சந்தை புதுக்குப்பம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கல்வித்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினாா். அப்போது அவா் பேசியது:
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் புத்தகப் பை மற்றும் காலணி விரைவில் வழங்கப்பட உள்ளது. மேலும், மாணவா்களின் ஆங்கில புலமையை மேம்படுத்தவும், சரளமாக ஆங்கிலத்தில் பேசவும் சிறப்பு புத்தகம் வழங்கப்பட உள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ அருள்முருகன், கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி, துணை இயக்குநா் குணசேகரன், மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் எழில்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.