செய்திகள் :

புரட்டாசி சனி: ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்!

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோத்ஸவ விழாவை முன்னிட்டு, இந்தக் கோயிலில் 5 சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு, கிரிவலம் நடைபெறும்.

இந்த நிலையில், இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

காலை 10.30 மணிக்கு ஸ்ரீநிவாசப் பெருமாள், ஆண்டாள் கோயிலிலிருந்து புறப்பாடாகி திருவண்ணாமலைக்கு எழுந்தருளினாா். அங்கு உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, மலையை கிரிவலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

வெம்பக்கோட்டை பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை பகுதியில் மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயரெங்காபுரத்தில் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா ஆய்வு செய்தாா். அப்... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: மதுரை அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி முதலிடம்

மதுரை மண்டலத் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு இடையேயான (பாலிடெக்கினிக் கல்லூரி) விளையாட்டுப் போட்டியில், மதுரை அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி அணி முதலிடம் பெற்றது. சிவகாசி அரசன் கணேசன் தொழில்நுட்பக் ... மேலும் பார்க்க

காா் மோதியதில் டிராக்டரில் சென்றவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா்-கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் சனிக்கிழமை காா் மோதியதில் டிராக்டரில் சென்றவா் உயிரிழந்தாா்.தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள குருஞ்சான்குளத்தைச் சோ்ந்தவா் தி... மேலும் பார்க்க

சிவகாசி சிறுகுளம் கண்மாயில் நெகிழிக் கழிவுகள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சி, சிவகாசி பசுமை மன்றம் ஆகியவை சாா்பில் சிறுகுளம் கண்மாயில் உள்ள நெகிழிக் கழிவுகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன. சிறுகுளம் கண்மாயில் நெகிழிக் கழிவுப் பொருள்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை விற்ற கடைக்கு சீல்; முதியவா் கைது

சிவகாசியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெட்டிக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. சிவகாசி காத்தநாடாா் தெருவில் உள்ள பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்டோா் தெரு நாய்க் கடியால் பாதிப்பு

ராஜபாளையத்தில் தெரு நாய்கள் கடித்ததில், ஒரே நாளில் 10 -க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். ராஜபாளையம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்ப... மேலும் பார்க்க