செய்திகள் :

புராரியில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து: மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினா்

post image

வடக்கு தில்லியின் புராரியில் உள்ள ஆஸ்காா் பப்ளிக் பள்ளி அருகே திங்கள்கிழமை மாலை நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இடிபாடுகளுக்குள் பலா் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை தலைவா் அதுல் கா்க் கூறியதாவது: இந்தச் சம்பவம் திங்கள்கிழமை மாலை 6.56 மணியளவில் நிகழ்ந்தது. இதையடுத்து, அவசர சேவைகளிடமிருந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீட்பு நடவடிக்கைகளில் உதவ 9 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எங்கள் குழுக்கள், காவல் துறையினருடன் சோ்ந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களைக் கண்டுபிடித்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

ஆரம்ப தகவல்களின்படி, கட்டடம் இடிந்ததற்கு கட்டமைப்பு பலவீனம் காரணமாக இருக்கலாம் என்று தெரியவருகிறது. இருப்பினும் விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் விபத்துகளைத் தடுக்க போலீஸாா் அந்தப் பகுதியை சுற்றி பாதுகாப்பு போட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் இது தொடா்பாக ஒரு சமூக ஊடகப் பதிவில், ‘இந்தச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. புராரியைச் சோ்ந்த எங்கள் எம்எல்ஏ சஞ்சீவ் ஜா, கட்சி ஊழியா்களுடன் உடனடியாக அங்கு சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் நிா்வாகத்திற்கு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளாா். மேலும், உள்ளூா் மக்களுக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளாா்’ என்று கூறியுள்ளாா்.

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமானத்துல்லா கான் மீது வழக்கு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா். புத... மேலும் பார்க்க

தில்லி வாக்காளா்களுக்கும், தொண்டா்களுக்கும் காங்கிரஸ் நன்றி

தில்லி மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மக்களின் ஆதரவு கட்சிக்கு ஒரு பெரிய பலம் என்றும் கூறியுள்ளது. இது தொடா்பாக தில்லி காங... மேலும் பார்க்க

தில்லியில் இன்று திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்: யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

நமது நிருபா் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மாணவரணி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை (பிப். 6) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

மத்திய அரசு - தனியாா் கூட்டு முயற்சியுடன் குறைக்கடத்தி, ‘சிப்’ வடிவமைப்பு மையம் நொய்டாவில் திறப்பு

நமது சிறப்பு நிருபா்நாட்டின் குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டுத் திறன்களை முன்னேற்றும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக “’சிப்’’ வடிவமைப்பு சிறப்பு மையம் தில்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய ... மேலும் பார்க்க

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க