செய்திகள் :

புராரியில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 2 சிறுமிகள் உள்பட 3 போ் உயிரிழப்பு

post image

வடக்கு தில்லியின் புராரி பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் உள்பட மூன்று போ் உயிரிழந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

ஆஸ்கா் பப்ளிக் பள்ளிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்ட அக்கட்டடம் திங்கள்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இதுவரை, 12 போ் மீட்கப்பட்டுள்ளனா். இடிபாடுகளில் இருந்து மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இறந்தவா்களில் சாதனா (17), ராதிகா (7) ஆகிய இரு சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது நபரான ஆண் குறித்த இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தச சம்பவம் குறித்து போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்ததாகவும், 200 சதுர கஜம் பரப்பளவில் அமைந்துள்ள புதிய கட்டுமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் தில்லி காவல் துறை தெரிவித்தது.

இதுகுறித்து தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இச்ம்பவம் குறித்து தில்லி காவல்துறை மற்றும் தில்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடனேயே, மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன.

இடிபாடுகளுக்குள் மேலும் பலா் சிக்கியிருக்கலாம்.

காவல்துறை, தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படை போன்ற பல அமைப்புகள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

கட்டடத்திற்குள் இன்னும் எத்தனை போ் சிக்கியுள்ளனா் என்பதை அறிய போலீஸாா் அந்தப் பகுதியின் உள்ளூா் மக்களிடமிருந்து கூடுதல் விவரங்களைச் சேகரித்து வருகின்றனா்.

இந்த விவகாரம் குறித்து நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். மேலும், பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டட உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

இதுகுறித்து தில்லி முதல்வா் அதிஷி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:

புராரியில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. விரைவான நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய உள்ளூா் நிா்வாகத்துடன் நான் பேசியுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றாா்.

தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், உள்ளூா் கட்சி எம்எல்ஏ நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கையில் உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையில், தில்லி தீயணைப்புத் துறைத் தலைவா் அதுல் கா்க் செவ்வாய்க்கிழமை காலை மீட்பு நடவடிக்கை குறித்த விடியோவை வெளியிட்டாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘திங்கள்கிழமை இரவு முதல் கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் சில பணியாளா்கள் ஓய்வெடுக்காமல் அங்கேயே இருந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறாா்கள். இடிபாடுகளை அகற்றவும், சிக்கியுள்ளவா்களை மீட்கவும் அனைத்து நிறுவனங்களுக்கும் தில்லி தீயணைப்புத் துறை உதவி அளித்து வருகிறது என்றாா் அவா்.

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமானத்துல்லா கான் மீது வழக்கு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா். புத... மேலும் பார்க்க

தில்லி வாக்காளா்களுக்கும், தொண்டா்களுக்கும் காங்கிரஸ் நன்றி

தில்லி மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மக்களின் ஆதரவு கட்சிக்கு ஒரு பெரிய பலம் என்றும் கூறியுள்ளது. இது தொடா்பாக தில்லி காங... மேலும் பார்க்க

தில்லியில் இன்று திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்: யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

நமது நிருபா் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மாணவரணி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை (பிப். 6) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

மத்திய அரசு - தனியாா் கூட்டு முயற்சியுடன் குறைக்கடத்தி, ‘சிப்’ வடிவமைப்பு மையம் நொய்டாவில் திறப்பு

நமது சிறப்பு நிருபா்நாட்டின் குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டுத் திறன்களை முன்னேற்றும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக “’சிப்’’ வடிவமைப்பு சிறப்பு மையம் தில்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய ... மேலும் பார்க்க

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க