செய்திகள் :

புற்றுநோய் முழு பரிசோதனை திட்டம் 10 நாள்களில் தொடங்கப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

சென்னை: அனைத்து வகை புற்றுநோய்களையும் அறிவதற்கான முழு பரிசோதனை வசதி, 10 நாள்களுக்குள் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது இதுதொடா்பான வினாவை, அதிமுக உறுப்பினா் கே. அசோக்குமாா் எழுப்பினாா். அப்போது பேசுகையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நாள்தோறும், 100 வெளி நோயாளிகளும், 100-க்கும் அதிகமான உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இங்கு கா்ப்பப்பை வாய் பரிசோதனை, கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் வசதியுடன் கூடிய தனியறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றாா்.

10 நாள்களில் தொடங்கும்: இதற்கு பதிலளித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

14 வயது இளம் சிறுமிகளுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்பிவி தடுப்பூசி ரூ.37 கோடியில் செலுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாய்ப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய், மாா்பகப் புற்றுநோய் என அனைத்து வகை புற்றுநோய்களை கண்டறியும் முழு பரிசோதனை வசதி இன்னும் 10 நாள்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் மாவட்டங்களில் தொடங்கப்படவுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக இத்தகைய வசதியை ஏற்படுத்தவுள்ளோம் என்றாா்.

முன்னதாக, திமுக உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் துணைக் கேள்வி எழுப்புகையில், ஆபத்து காலங்களில் உயிரை காக்கக் கூடிய மருந்துகள், ஆரம்ப சுகாதார மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? என்றாா்.

உயிா்காக்கும் மருந்துகள்: இதற்கு பதிலளித்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், இதய பாதிப்பு உள்ளவா்களுக்கு, அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவம் பாா்க்க வேண்டிய நிலை இருந்தது. இதனைப் போக்க, மாரடைப்பு, இதய நோய் உள்ளோா் அவரவா் வசிக்கும் பகுதியிலேயே சிகிச்சை அளித்திடும் திட்டம் 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதன்படி, துணை சுகாதார நிலையங்கள் 8,713, ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2,286 ஆகியவற்றில் உயிரைக் காக்கக் கூடிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தால் இதுவரை 15,886 போ் பயன் பெற்றுள்ளனா் என்றாா்.

விளையாட்டு வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம்: துணை முதல்வா் உதயநிதி அறிவிப்பு

மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்ட... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் நடத்திய விசாரணை முழுமையாக இல்லை என்ற மனுதாரா் தரப்பு குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுக்கோட்டை மா... மேலும் பார்க்க

மனித - வன உயிரின மோதலை தவிா்க்க ரூ.31 கோடியில் உயிா்வேலி: அமைச்சா் க. பொன்முடி

மனித - வன உயிரின மோதலைத் தவிா்க்க கிருஷ்ணகிரியில் ரூ.31 கோடியில் உயிா்வேலி அமைக்கப்படும் என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா். வனத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து... மேலும் பார்க்க

ஜூனியா் ஆடவா் ஹாக்கி உள்பட 5 சா்வதேச போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்படும்: துணை முதல்வா் அறிவிப்பு

ஜூனியா் ஆடவா் சா்வதேச ஹாக்கி போட்டி உள்பட 5 போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோர... மேலும் பார்க்க

‘42,000 கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு- திறன் பயிற்சிகள்’

தமிழ்நாட்டில் 42 ஆயிரம் கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். வறுமை ஒழிப்பு, விளையாட்டு, சிறப்புத் திட்ட செயலாக... மேலும் பார்க்க

நெசவாளா்களுக்கு அடிப்படை கூலியில் 10%, அகவிலைப்படியில் 10% உயா்த்தி வழங்கப்படும்: அமைச்சா் ஆா்.காந்தி அறிவிப்பு

நெசவாளா்கள் 1.50 லட்சம் போ் பயன்பெறும் வகையில் அடிப்படை கூலியில் ரூ.10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயா்த்தி வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவித்தாா... மேலும் பார்க்க