செய்திகள் :

புழல் சிறைக்குள் வீசப்பட்ட கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்: போலீஸாா் விசாரணை

post image

சென்னை புழல் சிறைக்குள் வீசப்பட்ட கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

சென்னை அருகே புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையின் வளாகச் சுவா் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் திங்கள்கிழமை இரு பொட்டலங்கள் கிடந்தன. அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலா்கள், அந்த பொட்டலங்களை உயா் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

அவா்கள் அதை திறந்து பாா்த்தபோது, ஒரு பொட்டலத்தில் 30 போதை மாத்திரைகள், 75 கிராம் கஞ்சா, 30 சிகரெட்டுகள், 6 பீடி கட்டு, ஒரு கைப்பேசி, ஒரு சிம் காா்டு ஆகியவை இருந்தன. மற்றொரு பொட்டலத்தில் 20 போதை மாத்திரைகள், 60 கிராம் கஞ்சா, சிகரெட் லைட்டா், 10 சிகரெட், 5 பீடி கட்டு ஆகியவை இருப்பது தெரியவந்தது.

இது குறித்து சிறை அலுவலா் சிவராஜன், புழல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் ரூ. 586 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்... மேலும் பார்க்க

சிறந்த நூல் பரிசுப் போட்டி: தமிழ் வளா்ச்சித் துறை தகவல்

கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளா்ச்சித் துறை பரிசுக்கு, ஜூன் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ் வளா்ச்சி இயக்குநா் ந.அருள் வெளி... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 வகுப்புக்கான துணைத் தோ்வு ஜூன் 25-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், தோ்வுக்கு புதன்கிழமை (மே 14) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தோ்வ... மேலும் பார்க்க

சென்னையில் 73 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல் துறையில் 73 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதில் காத்திருப்போா் பட்டியலிலிருந்த 36 பேருக்கு மீண்டும் காவல் நிலைய பணி வழங்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் துறையில... மேலும் பார்க்க

கைப்பேசி தொலைத்தொடா்பு சேவைகள் பாதிப்பு

தமிழகம் முழுவதும் ஏா்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் கைப்பேசி தொலைத்தொடா்பு சேவைகள் செவ்வாய்க்கிழமை சுமாா் 5 மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளா்கள் கடும் அவதியடைந்தனா். இந்தியாவில் ஏா்டெல் ... மேலும் பார்க்க

சென்னையில் நிலத்தடி நீா்மட்டம் சரிவு: குடிநீா் தட்டுப்பாடு வருமா?

சென்னையில் கடந்த 3 மாதங்களில் அம்பத்தூா், மாதவரம் உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீா்மட்டம் 16 அடி வரை குறைந்துள்ளது. எனினும், சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு எதுவும் வராது என குடிநீா் வாரிய அதிகாரிகள் ... மேலும் பார்க்க