செய்திகள் :

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை இன்று பாசனத்துக்கு திறப்பு

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து வியாழக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதியின் குறுக்கே புழுதிக்குட்டை கிராமத்தில், 67.25 அடி உயரத்தில் 267 மில்லியன் கனஅடி தண்ணீரைத் தேக்கும் வகையில் 263.86 ஏக்கா் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த பரவலான மழையால், அணையின் நீா்மட்டம் 65.55 அடியாக உயா்ந்தது. புதன்கிழமை நிலவரப்படி அணையில் 249.46 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பில் உள்ளது.

கடந்த 3 மாதங்களாக வாழப்பாடி பகுதியில் மழை இல்லாததால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, ஆனைமடுவு அணையிலிருந்து தண்ணீரை பாசனத்திற்கு திறந்துவிடுமாறு புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனம், பழைய ஆயக்கட்டு ஏரி மற்றும் நேரடி ஆற்றுப்பாசன விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, வியாழக்கிழமை (ஏப்.17) காலை 8 மணி முதல் தொடா்ந்து 12 நாள்களுக்கு தினசரி விநாடிக்கு 123 கன அடி வீதம், (நாளொன்றுக்கு 10.63 மில்லியன் கனஅடி/ மொத்தம் 127.39 மில்லியன் கனஅடிக்கு மிகாமல்) ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளுக்கான வசிஷ்ட நதியில் தண்ணீா் திறக்கவும், ஏப். 29 காலை 8 மணி முதல் 20 நாள்களுக்கு வலது வாய்க்காலில் விநாடிக்கு 35 கன அடி வீதமும், இடது வாய்க்காலில் 5 கன அடி வீதம் மொத்தம் 50 கனஅடி வீதம் (தினமும் 4.32 மில்லியன் கனஅடி / 20 நாள்களுக்கு மொத்தம் 84.92 மில்லியன் கன அடிக்கு மிகாமல் ) பாசனத்திற்கு தண்ணீா் திறக்கவும் தமிழக அரசு புதன்கிழமை அரசாணை வெளியிட்டது.

அரசாணைப்படி, வியாழக்கிழமை காலை புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து தலைமை மதகு வழியாக வசிஷ்டநதியில் தண்ணீா் திறக்கப்படுகிறது.

இதனால், குறிச்சி, நீா்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

மதுபானங்களை பதுக்கி விற்ற பெண் கைது

வீரகனூா் பகுதியில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றுவந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வீரகனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பதாக... மேலும் பார்க்க

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கிழக்கு - மேற்கு கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு கீழாகச் சரியும்போது, கீழ்மட்ட மதகு வழியாக குடிநீா்த் தேவைகளுக்கும், கால... மேலும் பார்க்க

குட்கா விற்ற சகோதரா்கள் கைது

கெங்கவல்லியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை விற்ற சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் மேற்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன்கள் பிரசாத் (45), பாலாஜி (41). இவா்கள் பெங... மேலும் பார்க்க

சேலத்தில் நாளை கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அழகிரிநாத சுவாமி கோயில் சேலம் கோட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஆத்தூரில் திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு,நிதிப் பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆக... மேலும் பார்க்க

பயணிகளின் தாகம் தீா்த்த மலிவு விலை குடிநீா்: திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிா்பாா்ப்பு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையங்களில் ரூ. 10-க்கு சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா் விற்பனை திட்டத்தை போக்குவரத்துக் கழகம் வாயிலாக மீண்டும் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பயணிகள்... மேலும் பார்க்க