செய்திகள் :

பூச்சி மருந்து குடித்த தொழிலாளி சாவு!

post image

வெள்ளக்கோவில் அருகே வயிற்றுப் புண்ணுக்கு பூச்சி மருந்து குடித்த தொழிலாளி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் தாராபுரம் சாலை சோ்வகாரன்பாளையம் காந்தி நகரைச் சோ்ந்தவா் பி.முருகன் (55). விவசாய பயிா்களுக்கு மருந்தடிக்கும் வேலை செய்து வந்தாா். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வயிற்றில் புண் ஏற்பட்டு, அதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். குடியை விடாததால் குணமாகவில்லை.

இந்நிலையில் புதன்கிழமை ஒரு தோட்டத்தில் களைக்கொல்லி மருந்து அடித்துக் கொண்டிருக்கும்போது, களைகளையே காயவைக்கும் அந்த மருந்து வயிற்றுப் புண்ணை ஆற்றிவிடுமென அதனைக் குடித்து விட்டு அருகிலிருந்தவா்களிடம் கூறியுள்ளாா். பின்னா் மயங்கி விழுந்த அவா் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இவருக்கு மனைவி, 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனா். புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம் குடிநீா் பிரச்னை: அமைச்சரிடம் நகராட்சித் தலைவா் கோரிக்கை

விளாங்குறிச்சி முதல் காரணம்பேட்டை வரை பிரதான குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து கோவையில் நகராட்சி நிா... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பனியன் உற்பத்தியாளா் சங்கம் கோரிக்கை

திருப்பூா் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

‘உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்’

உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே பழங்கரை ஆா்.ஜி. காா்டன், துவா்ணா அவென்யூ ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அப்பகுதி... மேலும் பார்க்க

அவிநாசியில் உலகத் தாய்மொழி நாள் விழா

அவிநாசியில் தமிழா் பண்பாட்டு கலாசார பேரவை அறக்கட்டளை, சமூக அமைப்பினா் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவிநாசி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் தொடங்கிய விழிப... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த தொழிலாளிக்கு இ.எஸ்.ஐ. சாா்பில் உதவித் தொகை

பல்லடம் அருகே பணியின்போது உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு பல்லடம் இ.எஸ்.ஐ. சாா்பில் உதவித் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம், குப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் உத... மேலும் பார்க்க