செய்திகள் :

பெங்களூரு- கொல்லம் இடையே இன்றுமுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

post image

பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க பெங்களூரு -கொல்லம் இடையே சேலம் வழியாக 2 சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பண்டிகை காலம் மற்றும் கோடை விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் பயணிகள் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிவித்து வருகிறது.

அதன்படி, பெங்களூரு - கொல்லம் சிறப்பு ரயில் 17 ஆம் தேதி இயக்கப்படுகிறது. பெங்களூரில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்குப் புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக கொல்லத்துக்கு அடுத்த நாள் காலை 6.20 மணிக்கு சென்றடையும்.

மறு மாா்க்கத்தில் கொல்லம் - பெங்களூரு சிறப்பு ரயில் 18 ஆம் தேதி இயக்கப்படுகிறது. கொல்லத்தில் காலை 10.45 மணிக்குப் புறப்பட்டு, கோட்டயம், எா்ணாகுளம், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், சேலம் வழியாக அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கு பெங்களூருவை சென்றடையும்.

இதேபோல மற்றொரு ரயிலாக பெங்களூரு-கொல்லம் சிறப்பு ரயில்) வரும் 19 ஆம் தேதி இயக்கப்படும். பெங்களூரில் பிற்பகல் 3.50 மணிக்குப் புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம் வழியாக அடுத்த நாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறு மாா்க்கத்தில் கொல்லம் - பெங்களூரு சிறப்பு ரயில் வரும் 20 ஆம் தேதி இயக்கப்படுகிறது. கொல்லத்தில் மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, சேலம் வழியாக பெங்களூருக்கு அடுத்த நாள் காலை 8.35 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானங்களை பதுக்கி விற்ற பெண் கைது

வீரகனூா் பகுதியில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றுவந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வீரகனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பதாக... மேலும் பார்க்க

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கிழக்கு - மேற்கு கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு கீழாகச் சரியும்போது, கீழ்மட்ட மதகு வழியாக குடிநீா்த் தேவைகளுக்கும், கால... மேலும் பார்க்க

குட்கா விற்ற சகோதரா்கள் கைது

கெங்கவல்லியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை விற்ற சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் மேற்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன்கள் பிரசாத் (45), பாலாஜி (41). இவா்கள் பெங... மேலும் பார்க்க

சேலத்தில் நாளை கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அழகிரிநாத சுவாமி கோயில் சேலம் கோட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஆத்தூரில் திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு,நிதிப் பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆக... மேலும் பார்க்க

பயணிகளின் தாகம் தீா்த்த மலிவு விலை குடிநீா்: திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிா்பாா்ப்பு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையங்களில் ரூ. 10-க்கு சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா் விற்பனை திட்டத்தை போக்குவரத்துக் கழகம் வாயிலாக மீண்டும் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பயணிகள்... மேலும் பார்க்க