செய்திகள் :

பெண் காவலா் பொய் பாலியல் புகாா்: மகேஷ்குமாா் மனைவி குற்றச்சாட்டு

post image

வீடு கட்ட ரூ. 25 லட்சம் கொடுக்காததால் பெண் காவலா் பொய்யான பாலியல் புகாா் அளித்துள்ளதாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இணை ஆணையா் மகேஷ்குமாரின் மனைவி அனுராதா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா், பெண் காவலா் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனுவும் அளித்தாா்.

சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையா் டி.மகேஷ்குமாா், பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்தது. இதன் அடிப்படையில் மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டாா். அதேவேளையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால், விசாகா குழுவுக்கு உத்தரவிட்டாா். டிஜிபி சீமா அகா்வால் தலைமையிலான விசாகா குழுவினா் இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் மகேஷ்குமாரின் மனைவியும், முன்னாள் காவல் உதவி ஆய்வாளருமான அனுராதா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பெண்காவலருக்கும் என் கணவருக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்தது. இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வதை பலமுறை கண்டித்திருக்கிறேன்.

அந்த பெண் காவலா் மறைமலை நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறாா். அந்த பெண் காவலா் எனது கணவரிடம் வீட்டின் கட்டுமானப் பணிக்கு ரூ. 25 லட்சம் கேட்டாா்.

பணம் தராததால் என் கணவா் மீது பொய்யான பாலியல் துன்புறுத்தல் புகாா் கொடுத்துள்ளாா் இந்த விவகாரம் தொடா்பாக விசாகா குழு நியாயமாக விசாரிக்க வேண்டும் என்றாா் அவா். மேலும், மகேஷ்குமாா் அந்தப் பெண் காவலருடன் ஹோட்டலுக்கு சென்றிருந்த விடியோ காட்சியை அனுராதா வெளியிட்டாா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு காமராஜா் விருது: ரூ.1.72 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் கல்வி, இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காமராஜா் விருதுக்கான பரிசுத் தொகை வழங்க ரூ.1.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்... மேலும் பார்க்க