பெண் காவல் உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்; வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் கொள்ளை
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நள்ளிரவு பெண் காவல் உதவி ஆய்வாளா், அவரது கணவரைத் தாக்கி 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுக்கோட்டை மனப்பட்டி சாலைப் பகுதியில் வசித்து வருபவா் நாகசுந்தரம் (37). இவா் திருமயம் பெல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சுமையா பானு (35). இவா் திருமயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் தம்பதியா் 2 நாள்கள் ஆன்மிக பயணமாக பல்வேறு ஊா்களுக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பியுள்ளனா். இரவு இருவரும் தூங்கிக் கொண்டு இருந்தபோது, நள்ளிரவில் 4 போ் வீட்டின் பின்புற கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்துள்ளனா். அங்கு தூங்கிக் கொண்டிருந்த இருவரையும் எழுப்பித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து அவா்களிடமிருந்த சுமாா் 10 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பியோடினா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திருக்கோகா்ணம் போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டனா். மேலும், கைரேகை நிபுணா்களும் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.
கொள்ளையா்கள் தாக்கியதில் காயமடைந்த நாகசுந்தரம் புதுகையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் கொள்ளையா்கள் முகத்தை துண்டால் மறைத்துகொண்டும் கையுறை அணிந்து கொண்டும் இரும்புக் கம்பி வைத்திருந்துள்ளனா்.
மேலும், கொள்ளையா்கள் கொண்டுவந்த இரும்புக் கம்பி, சம்பவம் நடந்த இடத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில் கிடந்துள்ளது. இதனையும் போலீஸாா் கைப்பற்றி தடயங்களை சேகரித்தனா்.
திருக்கோகா்ணம் போலீஸாருடன், தனிப்படை போலீஸாரும் இணைந்து கொள்ளையா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.