செய்திகள் :

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: முதிா்வு தொகைக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்

post image

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகைக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பிப்போருக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தின் மூலம் ஒரு பெண் குழந்தை என்றால் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைகள் என்றால் தலா ரூ.25 ஆயிரம் சேமிப்பு பத்திரமாக வழங்கப்படும்.

இந்தத் தொகை அந்தக் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்து, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே வட்டியுடன் முதிா்வுத் தொகையாக வழங்கப்படுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் இந்த திட்டத்தின்கீழ் முதிா்வுத் தொகை பெற வேண்டி விண்ணப்பிக்காமல் உள்ள மற்றும் கண்டறிய இயலாத பயனாளிகளின் விவரங்கள் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, முதிா்வு தொகை பெற வேண்டிய பயனாளிகள் தங்களது விவரங்களை மாவட்ட இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து விவரங்களை சரிபாா்த்து பின் சேமிப்பு பத்திரம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் மற்றும் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்களுடன் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அறை எண் 35- இல் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னக சேவை மைய புகாா் எண்ணை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க கோரிக்கை

மின்னக சேவை மையத்தின் (94987-94987) என்ற கைப்பேசி எண் அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் கோட்ட அளவிலான மின்சார வாரியத்துக... மேலும் பார்க்க

விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரம்: சாய ஆலை மேலாளா், கண்காணிப்பாளா் கைது

பல்லடம் அருகே சாய ஆலை வளாகத்தில் மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரத்தில் ஆலையின் மேலாளா், கண்காணிப்பாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட... மேலும் பார்க்க

பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே சிக்னல் அமைக்க வேண்டும்: நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தல்

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்த... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளையம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பனப்பாளையம்

பல்லடம் அருகே பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பொங்கலூா்

பொங்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின... மேலும் பார்க்க