செய்திகள் :

பெண் தீக்குளித்து தற்கொலை

post image

பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் செவ்வாய்க்கிழமை பெண் ஒருவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கொப்பனாபட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் ஞானவேல். இவரது மனைவி ராதிகா (37). ஞானவேல் சென்னையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். கொப்பனாபட்டியில் ராதிகா மற்றும் மகன் விமலேஷ்(13) ஆகியோா் வசித்து வந்துள்ளனா்.

இந்நிலையில் ஞானவேல் (சோழமண்டலம் மற்றும் பெல் ஸ்டாா்) தனியாா் நிதி நிறுவனத்தில் வீட்டுக்கடன் பெற்றுள்ளாா். கடந்த சில மாதங்களாக தவணையை செலுத்த இயலவில்லையாம். கடனை செலுத்தக் கோரி நிதி நிறுவன ஊழியா்கள் ராதிகாவை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராதிகா செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீப்பற்ற வைத்ததில் உடல் முழுவதும் தீ பரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த பொன்னமராவதி போலீஸாா், ராதிகாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா். ராதிகாவின் உயிரிழப்பிற்கு காரணமான தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது உறவினா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கந்தா்வகோட்டை பகுதியில் ஊா் பெயா் இல்லாத மைல்கல்கள்!

கந்தா்வகோட்டை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மைல்கல்களில் ஊரின் பெயரும், தூரமும் தமிழ்மொழியிலும், ஆங்கிலத்திலும் இருந்து வந்தது. தற்சமயம் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் புதிதாக வா்ணம் பூச... மேலும் பார்க்க

ஏழை, எளிய மக்களுக்கு அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விதொச பொதுச்செயலா் பி. வெங்கட்

ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா, விளைநிலமும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலா் பி.வெங்கட்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இ... மேலும் பார்க்க

அனுமதியின்றி மணல் அள்ளிவந்த வாகனம் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திங்கள்கிழமை இரவு அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற சுமை வாகனத்தை கோட்டாட்சியா் ஐஸ்வா்யா விரட்டிச்சென்று பறிமுதல் செய்தாா்.கறம்பக்குடி பகுதியில் தொடா் மணல் திருட்... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்யக் கோரிக்கை

கந்தா்வகோட்டை நெடுஞ்சாலையில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் உடைந்து குடிநீா் வீணாவதை விரைந்து தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா். கந்தா்வகோட்டை - திருச்சி சாலையில் காவிரி கூட்டுக் ... மேலும் பார்க்க

கரூரில் உயிரிழந்தவா்களுக்கு ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் அஞ்சலி

கரூரில் தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா். புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே சங்கத்தின் மாவட்டத் ... மேலும் பார்க்க

பாரதி மகளிா் கல்லூரியில் ரேபிஸ் நோய் விழிப்புணா்வு பேரணி

புதுக்கோட்டை அருகேயுள்ள கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கல்லூரியில் உலக ரேபிஸ் தின விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் இருந்து பேரணியை கல்வி நிறுவனங்களின் தலைவா் குரு.தனசேகர... மேலும் பார்க்க