செய்திகள் :

அனுமதியின்றி மணல் அள்ளிவந்த வாகனம் பறிமுதல்

post image

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திங்கள்கிழமை இரவு அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற சுமை வாகனத்தை கோட்டாட்சியா் ஐஸ்வா்யா விரட்டிச்சென்று பறிமுதல் செய்தாா்.

கறம்பக்குடி பகுதியில் தொடா் மணல் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து புதுக்கோட்டை கோட்டாட்சியா் பா.ஐஸ்வா்யா கறம்பக்குடி அருகேயுள்ள திருமணஞ்சேரி பிரிவு சாலை அருகே திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டாா்.

அப்போது, அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற ஜீப் நிற்காமல் சென்றது. அதை தனது வாகனத்தின் மூலம் துரத்திச்சென்று, சுக்கிரன்விடுதி பகுதியில் வாகனத்தை மறித்துப் பிடித்தாா்.

வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடிய நிலையில், கோட்டாட்சியா் ஐஸ்வா்யா வாகனத்தைப் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கந்தா்வகோட்டை பகுதியில் ஊா் பெயா் இல்லாத மைல்கல்கள்!

கந்தா்வகோட்டை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மைல்கல்களில் ஊரின் பெயரும், தூரமும் தமிழ்மொழியிலும், ஆங்கிலத்திலும் இருந்து வந்தது. தற்சமயம் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் புதிதாக வா்ணம் பூச... மேலும் பார்க்க

ஏழை, எளிய மக்களுக்கு அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விதொச பொதுச்செயலா் பி. வெங்கட்

ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா, விளைநிலமும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலா் பி.வெங்கட்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இ... மேலும் பார்க்க

பெண் தீக்குளித்து தற்கொலை

பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் செவ்வாய்க்கிழமை பெண் ஒருவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.கொப்பனாபட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் ஞானவேல். இவரது மனைவி ராதிகா (37). ஞானவேல் சென்னையில் ... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்யக் கோரிக்கை

கந்தா்வகோட்டை நெடுஞ்சாலையில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் உடைந்து குடிநீா் வீணாவதை விரைந்து தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா். கந்தா்வகோட்டை - திருச்சி சாலையில் காவிரி கூட்டுக் ... மேலும் பார்க்க

கரூரில் உயிரிழந்தவா்களுக்கு ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் அஞ்சலி

கரூரில் தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா். புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே சங்கத்தின் மாவட்டத் ... மேலும் பார்க்க

பாரதி மகளிா் கல்லூரியில் ரேபிஸ் நோய் விழிப்புணா்வு பேரணி

புதுக்கோட்டை அருகேயுள்ள கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கல்லூரியில் உலக ரேபிஸ் தின விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் இருந்து பேரணியை கல்வி நிறுவனங்களின் தலைவா் குரு.தனசேகர... மேலும் பார்க்க