செய்திகள் :

பெண் நோயாளிகளின் சிகிச்சை விடியோக்களை வெளியிட்ட கும்பல்: மூவர் கைது!

post image

மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளிகளின் விடியோக்களை வெளியிட்ட விவகாரத்தில் மூன்று பேரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குஜராத் ராஜ்கோட்டில் உள்ள பாயல் மகப்பேறு இல்லம் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் பெண்களின் விடியோக்கள் சட்டவிரோதமாக டெலிகிராம் செயலி சேனலில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

அதில் ஒரு காணொளியில் ஒரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது டெலிகிராமில் வைரலானது. இதில், ஒரு குழுவில் இதுபோன்ற காணொளிகள் சந்தா பெற்று விற்கப்படுவது கண்டறியப்பட்டது.

இதையும் படிக்க | தாய் மரணம்.. 4 வயது மகள் வரைந்த ஓவியத்தைப் பார்த்து அதிர்ந்த போலீஸ்

இதுபோன்ற காணொளிகள் முறையின்றி பரவுவது நோயாளிகளின் தனியுரிமையை நேரடியாக மீறுவதாகும். இந்த நிலையில், அகமதாபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் மருத்துவமனையின் சிசிடிவி கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டதை விசாரணையில் உறுதிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அகமதாபாத் சைபர் கிரைம் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் பல மாநிலங்களில் விசாரணை மேற்கொண்டனர். இதில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பிரக்னேஷ் பாட்டீல், பிரஜ்வால் தேலி ஆகியோர் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு நபரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஏழு நபர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகின்றது. இவர்கள் ஒரு பெரிய அமைப்பாக செயல்பட்டு வந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் 2024 இல் இவற்றைப் பகிர தனியே ஒரு டெலிகிராம் சேனல் உருவாக்கப்பட்டு, ஜனவரி 6 அன்று யூடியூப்பில் ஒரு விடியோ வெளியாகி வைரலானது.

தற்போது யூடியூப் மற்றும் டெலிகிராமில் பரப்பப்பட்ட விடியோக்கள் சைபர் கிரைம் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளன என்றும் அவை மேலும் பரவாமல் தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க | பாகிஸ்தானில் பஞ்சாப் பயணிகள் சுட்டுக்கொலை! என்ன நடந்தது?

மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை நாடு முழுக்க சிலர் கசிய விடுவதாகவும் குஜராத் உள்பட 2 மாநிலங்களில் இதற்கென சைபர் குற்றவாளிகள் செயல்பட்டு வருவதாகவும் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகின்றது.

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத கா... மேலும் பார்க்க

அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ர... மேலும் பார்க்க

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் ... மேலும் பார்க்க

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை... மேலும் பார்க்க