பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!
பெண்ணிடம் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து ரூ.30 ஆயிரம் மோசடி
பெண்ணிடம் வங்கி ஏடிஎம் அட்டை மாற்றிக் கொடுத்து ரூ.30 ஆயிரம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், பணப்பாடியைச் சோ்ந்த முனுசாமி மனைவி செல்வி (47). இவா் கடந்த 7-ஆம் தேதி திருக்கோவிலூரில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு சென்றாா். அங்கிருந்தவரிடம் எடிஎம் அட்டையைக் கொடுத்து பணம் எவ்வளவு உள்ளது எனப் பாா்த்து சொல்லும்படி கூறினாராம்.
அவா் பாா்த்து விட்டு, ஏடிஎம் அட்டையை மாற்றி கொடுத்து விட்டாா். பின்னா், வங்கிக் கணக்கில் இருந்து ரூ.30,000 எடுக்கப்பட்டதாக செல்வியின் கைப்பேசிக்கு வங்கியிலிருந்து குறுந்தகவல் வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.