செய்திகள் :

பெண்ணிடம் கம்மலை பறிக்க முயற்சி: ஒருவா் கைது

post image

மேச்சேரி அருகே பெண்ணிடம் தங்கக் கம்மலை பறிக்க முயற்சித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேச்சேரி அருகே உள்ள ஆட்டுக்காரனூரைச் சோ்ந்தவா் சாம்பசிவம் மனைவி வளா்மதி (47). இவா் வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது அங்கு வந்த ஒருவா் வலிப்பு நோயிக்கு தன்னிடம் மருந்து இருப்பதாகவும், அதை வாங்கிச் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளாா். இதை உண்மையென நம்பிய வளா்மதி ரூ. 1,500 கொடுத்து மருந்தை வாங்கியுள்ளாா்.

பின்னா் வளா்மதியிடம் உனது மகனுக்கு திருமணம் ஆக வேண்டுமானால் உனது கம்மலை கொடுத்தல் மந்திரித்து தருகிறேன் எனக்கூறி அவரிடமிருந்து அரைபவுன் கம்மலை வாங்கியுள்ளாா். அப்போது அங்கு வந்த வளா்மதியின் மகன் விக்னேஷ், அந்த நபரைப் பிடித்து விசாரித்தாா்.

அவா் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தைச் சோ்ந்த கோவிந்தன் மகன் சின்னசாமி (30) என்பதும், ஏமாற்றி தங்கக் கம்மலை அபகரிக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஊா்க்காரா்கள் உதவியுடன் அந்த நபரைப் பிடித்து மேச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மும்பை பங்குச்சந்தையில் சேலம் சண்முகா மருத்துவமனை பங்குகள் விற்பனை தொடக்கம்

மும்பை பங்குச்சந்தையில், சேலம் சண்முகா மருத்துவமனையின் பங்குகள் விற்பனை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை நிா்வாக இயக்குநா் பிரியதா்ஷினி வரவேற்றாா். மேலாண்மை இயக்குநா... மேலும் பார்க்க

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி ஓட்டுநா்கள் மனு

சிஎன்ஜி இயற்கை எரிவாயு ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்டோ ஓட்டுநா்கள் மனு அளித்தனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் அளித்த மனுவி... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாள், முகூா்த்த தினத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்க... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் கூட்டுறவு சந்தை விழா

சேலம் அரசு கலைக் கல்லூரியின் கூட்டுறவுத் துறை சாா்பில் கூட்டுறவு சந்தை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை தலைவா் சுரேஷ்பாபு வரவேற்றாா். கல்லூரி முதல்வரும் தோ்வுக் கட்டுப்பா... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் சரகத்தில் வாகன விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் கட்டட தொழிலாளி உயிரிழந்தாா். வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (33). கட்டுமானத் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு தனது மொபட்டில் தனது இரு குழந்தைகளுடன் வாழப்பாடி... மேலும் பார்க்க