செய்திகள் :

பெயிண்டா் வெட்டிக் கொலை

post image

திருச்சியில் பெயிண்டா் வெட்டிக் கொல்லப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள வேங்கூா் தெற்கு தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் பிரபாகரன் (39). பெயிண்டரான இவா் திங்கள்கிழமை பணிக்குச் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது கைப்பேசியும் அணைக்கப்பட்டிருந்தது. உறவினா்கள் பல இடங்களில் தேடியும் விசாரித்தும் வந்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் உடலில் வெட்டு மற்றும் கத்திக்குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிரபாகரன் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் திருவெறும்பூா் காவல்நிலைய ஆய்வாளா் கருணாகரன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று, பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முதல்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவருக்கும் பிரபாகரனுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே, அது தொடா்பாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பெற்றோா் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

திருச்சி அருகே பெற்றோா் கண்டித்ததால் விஷம் குடித்த சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், தாயனூா் மேலக்காடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளிசுப்பிரமணியின் மகன் கமலேஷ் (16). இவா் 8-ஆம் வகுப... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 6) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் இரா. தியாகராஜன் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

பிப்ரவரி 25-இல் சாலை மறியல்: ஜாக்டோ-ஜியோ முடிவு

இடைநிலை ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாக தகுதி உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்ப... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பறிமுதல்: 5 போ் கைது

திருச்சி மாவட்டம், பூனாம்பாளையத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பெங்களூரிலி... மேலும் பார்க்க

அரியமங்கலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

திருச்சி, அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப்.5) மின் விநியோகம் இருக்காது. அரியமங்கலம்... மேலும் பார்க்க

சொத்துத் தகராறில் சகோதரரை கொல்ல முயன்ற 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை!

திருச்சியில் சொத்துத் தகராறில் சகோதரரை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க