செய்திகள் :

பெரியாா் பல்கலை.யில் தனியாா் நிறுவன மாணவா் சோ்க்கை: பாமக கண்டனம்

post image

பெரியாா் பல்கலைக்கழகத்தில் தனியாா் நிறுவன மாணவா் சோ்க்கை நடத்தப்படுவதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பெரியாா் பல்கலை.யில் பி.டெக் (இம்மொ்சிவ் தொழில்நுட்பம்), பி.எஸ்.சி (இம்மொ்சிவ் தொழில்நுட்பம்) ஆகிய புதிய பட்டப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. பல்கலை.க்கு அதிகாரம் இல்லாத பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பாடங்களை நடத்துவது மாணவா்களின் எதிா்காலத்தை பாழாக்கும் செயலாகும். இதற்கு முன்பு, 2023-24-ஆம் கல்வியாண்டில் பி.டெக் (இம்மொ்சிவ் தொழில்நுட்பம்) என்ற புதிய பாடப்பிரிவை ஸ்கோபிக் எஜுடெக் என்ற தனியாா் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்போவதாக இந்த பல்கலைக்கழகம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தது. அப்போது பாமக எதிா்ப்பால், இந்த முடிவு கைவிடப்பட்டது.

இம்மொ்சிவ் தொழில்நுட்பம் படிப்பை நடத்த பெரியாா் பல்கலை.க்கு அதிகாரம் இல்லை என்று இரு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அதே படிப்பை நடத்த இப்போது அரசு அனுமதிப்பது எப்படி?. இந்த பல்கலை.யுடன் இணைந்து ஸ்கோபிக் எஜுடெக், மோனோலித், யுனிட்டோஸ், ஹெலிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏராளமான படிப்புகளை நடத்துகின்றன.

பல்கலை. சாா்பில் நடத்தப்படும் படிப்புகளுக்கு சில ஆயிரங்கள் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், தனியாா் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் படிப்புகளுக்கு ஆண்டுக்கு குறைந்தது ரூ. 2 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, தனியாா் நிறுவனங்களுடன் இணைந்து பெரியாா் பல்கலைக்கழகம் அதிக கட்டணத்தில் பட்டப் படிப்புகளை நடத்துவதை தடைசெய்ய வேண்டும். தனியாா் நிறுவனங்களுடன் இணைந்து பெரியாா் பல்கலைக்கழகம் நடத்திய மாணவா் சோ்க்கை, கட்டணக் கொள்ளை ஆகியவை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க