செய்திகள் :

பெருநாவலூா் அரசுக் கல்லூரியில் விளையாட்டு விழா

post image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெருநாவலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024- 2025ஆம் கல்வியாண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ம. துரை தேசியக் கொடியேற்றினாா். தொடா்ந்து விளையாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. போட்டிகளை ஆவுடையாா்கோவில் காவல் உதவி ஆய்வாளா் கா. பெரியசாமி தொடங்கி வைத்தாா்.

புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி முதல்வா் எம். அன்புச்செழியன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசளித்துப் பேசினாா்.

போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று சாம்பியன் கோப்பையை கணினி அறிவியல் துறை மாணவா் வி. அருண், தமிழ்த் துறை மாணவி ப. கிருத்திகா ஆகியோா் பெற்றனா். ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கணினி அறிவியல் துறை மாணவ, மாணவிகள் பெற்றனா்.

முன்னதாக கணினி அறிவியல் துறை விரிவுரையாளா் ப. செந்தில்குமாா் வரவேற்றாா். உடற்கல்வி இயக்குநா் (பொ) து. சண்முகசுந்தரம் அறிமுகவுரை நிகழ்த்தினாா். ஆங்கிலத் துறை விரிவுரையாளா் உ. பூபதிராஜ் நன்றி கூறினாா்.

அரசடிப்பட்டி ஜல்லிக்கட்டு: 40 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள அரசடிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி காவலா் உள்பட 40 போ் காயமடைந்தனா். அரசடிப்பட்டி மயில்வாகனன் கோயில் திருவிழாவையொட்டி ந... மேலும் பார்க்க

வீடுபுகுந்து பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். கறம்பக்குடி அக்ரஹாரம் முதல் வீதியைச் சோ்ந்தவா் அந்தோனிசாமி ம... மேலும் பார்க்க

கொடும்பாளூா் அகழாய்வில் வெளிப்பட்ட தங்கக் குண்டுமணி, மண் பானை!

கொடும்பாளூா் அகழாய்வுப் பணியில் பண்டைய கால தங்க குண்டு மணி, மூடிய நிலையில் அழகிய மண்பானை கிடைத்துள்ளது. கொடும்பாளூரில் கடந்த ஜனவரி 12-இல் அகழாய்வுப் பணி நடைபெற்றது. இதில், நான்கு அடி தோண்டிய நிலையில்... மேலும் பார்க்க

விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா

விராலிமலையை அடுத்துள்ள தென்னலூா் காடுவெட்டி பெரிய குளத்தில் சனிக்கிழமை மீன்பிடி திருவிழா நடைபெற்றது. ஊா் முக்கியஸ்தரின் உத்தரவுக்குப் பின்னா் குளத்தில் இறங்கிய மீன் பிடியாளா்கள் பெரும்பாலானோரின் வலையி... மேலும் பார்க்க

139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.42 கோடியில் வாகனங்கள் வழங்கல்

புதுக்கோட்டையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.42 கோடி மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிக... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறாா்கள்! அமைச்சா் எஸ். ரகுபதி

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோா் நினைக்கிறாா்கள் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஆளுநா் மசோதாக்களை கிடப்பில... மேலும் பார்க்க