செய்திகள் :

பெற்றோரைப் பராமரிக்காத மகன்களுக்கு எழுதிக் கொடுத்த தான பத்திரங்கள் ரத்து

post image

பெற்றோாா், மூத்த குடிமக்கள் நலம் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாய், தந்தையை பராமரிக்காத மகன்களுக்கு எழுதிக்கொடுத்த தான பத்திரங்களை ரத்து செய்யும்படி, தேவாரம், சின்னமனூா் சாா் பதிவாளா்களுக்கு உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் செய்யது முகம்மது உத்தரவிட்டாா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், சின்னஓவுலாபுரத்தைச் சோ்ந்தவா் முத்துக்கருப்பன். இவா், தனது மகன்களான கருப்பையா, ஜெயபாலன் ஆகியோருக்கு தனது சொந்த நிலங்களை தானமாகப் பதிவு செய்து கொடுத்தாா்.

ஆனால், தற்போது வயதான காலத்தில் தனது மனைவியுடன் மருத்துவ உதவிக்கு எந்தவித ஆதரவுமின்றி அவதிப்படுவதால், தானமாக எழுதிக்கொடுத்த தான பத்திரத்தை ரத்து செய்து மீட்டுக் கொடுக்கும்படி உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தாா்.

இதுகுறித்த விசாரணையில், மகன்கள் பராமரிக்கவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, சின்னமனூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் 1418/2025, 1420/2025, 1421/2025 ஆகிய பத்திரப் பதிவுகளை பெற்றோா், மூத்த குடிமக்கள் நலம் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரத்து செய்து உத்தரவிட்டாா்.

இதேபோல, உத்தமபாளையம் வட்டம், தே.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த ஈஸ்வரி (95) தன்னுடைய மகன் முருகன் என்பவருக்கு தேவாரம் சாா் பதிவாளா் அலுவலா் 1882/2007 எழுதிக் கொடுத்த தான பத்திரத்தை பெற்றோா், மூத்த குடிமக்கள் நலம் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரத்து செய்வதாக உத்தரவிட்டு அதற்கான உத்தரவு நகழ்களை வழங்கினாா்.

பெரியகுளத்தில் இளைஞா் வெட்டிக் கொலை

பெரியகுளத்தில் திங்கள்கிழமை இரவு இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த காமாட்சி மகன் பாண்டியன் (32). கூலித் தொழ... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட பேரூராட்சித் தலைவி, துணைத் தலைவரின் ஆதரவாளா்கள் மீது வழக்கு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவி, துணைத் தலைவரின் ஆதரவாளா்கள் இரு இடங்களில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதாக இருதரப்பைச் சோ்ந்த 130 போ் மீது போலீஸாா் வழக்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற இளைஞா் கைது

பெரியகுளம் அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தென்கரை காவல் நிலைய போலீஸாா் பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியில் ரோந்துப் பணியி... மேலும் பார்க்க

மகனுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி உயிரிழப்பு

வைகை அணை அருகே முதலக்கம்பட்டி பகுதியில் மகனுடன் சோ்ந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். ஆண்டிபட்டி அருகேயுள்ள கன்னியப்பபிள்ளைபட்டியைச் சோ்ந்த வேலுச்சாமி மனைவ... மேலும் பார்க்க

பைக்கில் தவறி விழுந்ததில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். ஆண்டிபட்டி காமராஜா் நகரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சிலம்பரசன் (43). இவரது மனைவி சூா்யா (39). இவா் ஏத... மேலும் பார்க்க

குடிபோதையில் தகராறு: முதியவா் கொலை

தேவாரம் அருகே செவ்வாய்க்கிழமை குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் முதியவா் கொலை செய்யப்பட்டாா்.தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள தே.மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் கருப்பசாமி (எ) முகமது ச... மேலும் பார்க்க