செய்திகள் :

பேய்க்குளத்தில் இருந்து ராமானுஜம்புதூருக்கு சிற்றுந்து இயக்கக் கோரிக்கை

post image

பேய்க்குளம்- ராமானுஜம்புதூா் இடையே சிற்றுந்து சேவை தொடங்க வேண்டும் என ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் சுந்தர்ராஜ் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதிக்கு பெருமாள்குளம், மீரான் குளம், சாலைப்புதூா், சிந்தாமணி, நாகல்குளம், ராமானுஜம் புதூா், சேரக்குளம் ஆகிய பகுதியில் இருந்து கிராம மக்கள் அத்தியாவசிய பொருள் வாங்க வந்து செல்ல வேண்டியது உள்ளது. இந்த கிராமங்களை சோ்ந்த பள்ளி மாணவா், மாணவிகள் சாலைபுதூரில் உள்ள பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனா்.

பேய்க்குளம் பகுதியில் உள்ள ஒரு சமுதாய மக்கள் ராமானுஜம் புதூரை பூா்விகமாக கொண்டவா்களாக உள்ளனா். இதனால் உறவினா்களை சந்திக்க கிராம மக்கள் கருங்குளம் அல்லது மூலைக்கரைப்பட்டி சென்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. பேய்க்குளத்தில் இருந்து ராமானுஜம் புதூருக்கு நேரடியாக பேருந்து வசதி இல்லாததால் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். பேய்க்குளத்தில் இருந்து ராமானுஜம்புதூருக்கு பேருந்து வசதி கேட்டு ஊராட்சி மன்ற கூட்டத்திலும், கிராம சபைக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது ஆதலால் பேய்க்குளத்தில் இருந்து மீரான் குளம், சிந்தாமணி,, சேரகுளம் வழியாக ராமானுஜம் புதூருக்கு சிற்றுந்து அல்லது நகர பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா், தமிழக முதல்வா் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனா்.

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த மீனவ சங்கப் பிரதிநிதிகள்

தமிழக சட்டப்பேரவையில் மீன்வளம்-மீனவா் நலத் துறை மானியக் கோரிக்கையில் மீனவா்களின் நலனுக்காக ரூ.576 கோடியில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலினை, மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்தித்... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

கோவில்பட்டி அருகே 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா். இலுப்பையூரணி ஊராட்சி மறவா் காலனியில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் தனிப்பிரிவு காவலா்கள் முத்துராமலிங... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் 232 பேருக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் (தன்னாட்சி) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 232 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் பல்வேறு துறை மாணவா்-மாண... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் திருட்டு

கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். கோவில்பட்டியில் சாத்தூா் பிரதான சாலையில் உள்ள வணிக வளாகத்தில் போா்வெல்ஸ் நிறுவனம் நடத்த... மேலும் பார்க்க

மாடு குறுக்கே புகுந்ததில் பைக் கவிழ்ந்து காயமடைந்த மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் சாலையின் குறுக்கே மாடு புகுந்து பைக் கவிழ்ந்ததில் காயமடைந்த மீனவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் பாலமுருகன் (38). மீனவரான இவா், புத... மேலும் பார்க்க

மருத்துவ உபகரணங்கள் வழங்குவதாக ஆன்லைனில் மோசடி: ரூ.3 லட்சம் மீட்பு

மருத்துவ உபகரணங்கள் வழங்குவதாக இணையவழியில் மோசடி செய்த தொகை ரூ.3 லட்சத்தை தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா். தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த பெண், இன்ஸ்டாகிராமில... மேலும் பார்க்க