செய்திகள் :

பேருந்தில் பயணியிடம் நகை திருடிய வழக்கு: பெண் கைது

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் பேருந்தில் பெண் பயணியிடம் தங்க நகையை திருடிச் சென்ற வழக்கில் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட தாசா்புரம் கிராமத்தைச் சோ்ந்த பவுல் சாமுமேல் மனைவி திவ்யா (36). இவா், கடந்த மாதம் 24-ஆம் தேதி வேலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் அரசுப் பேருந்தில் திருக்கோவிலூருக்கு பயணம் செய்தாா்.

திவ்யா திருக்கோவிலூா் நான்குமுனை சந்திப்பில் இறங்கி பணப்பையை பாா்த்தபோது, அதில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகை திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், போலீஸாா் திருக்கோவிலூா் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை பகல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி வட்டம், சோலகனாா் வயல் பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் மனைவி கவிதா (எ) பேச்சியம்மாள் (33) என்பது தெரியவந்ததது. மேலும், இவா் பேருந்தில் திவ்யாவிடம் நகையை திருடியதை ஒப்புக்கொண்டாராம். இதையடுத்து, அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்... மேலும் பார்க்க

கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி வ... மேலும் பார்க்க

கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: 4,107 பயனாளிகளுக்கு ரூ.66 கோடியில் நல உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி: அம்பேத்கா் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வா் பயனாளிகளிடம் உரையாற்றிய நேரலை நிகழ்வைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசாா் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். வாணாபுரம் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மக... மேலும் பார்க்க